Sunday, December 28, 2008

அமெரிக்காவில் கஷ்ட காலம்

அமெரிக்காவில் கஷ்டகால நிலவரம்


பல வருடங்களுக்கு முன்
அமெரிக்காவில்

ஓர் உயர்நிலைப் பள்ளி
முடிப்பு சான்றிதழ் மட்டும்
இருந்தால் போதும்
ஒரு வேலையில் அமரமுடியும்.
அந்த வேலை செய்து கிடைத்த
வருமானத்தை
வைத்து ஒரு அபார்ட்மெண்ட்
வாடகைக்கு எடுத்து வேறு
தேவையான செலவுகளை
எல்லாம்ஈடு செய்யமுடிந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக பலவித
மாற்றங்கள்மெரிக்காவிலும் உலகளவிலும் ஏற்பட்டன

1. யாரை எந்த வேலையில்
வைத்தாலும் அவர்களுக்கு
மணிக்கு 300 ரூபாய்
கொடுக்கவேண்டும் (minimum wage)

2. அவர்களுக்கு இலவசமாக
மருத்துவ காப்புறுதி
அளிக்கவேண்டும்

3. அவர்களது வயது கால பணச்
சேமிப்புக்கு
பங்களிக்கவேண்டும்

4. இந்த வரி....... அந்த
வரி....கட்டவேண்டும்
என்றெல்லாம் அமெரிக்காவில்
சட்டமியக்கினார்கள்

இதனால் ஒரு தொழிலாளி எந்த
வேலையை செய்தாலும் மற்ற
நாடுகளில் வசிக்கும்

பணக்காரர்கள் மாதிரி ரொம்ப
சௌகரியமான வாழ்க்கையை நடத்தி
வந்தனர் .

கொஞ்சம் கொஞ்சமாக உலகத்தில்
பல மாற்றங்கள் ஏற்பட்டன

பலர் ஆங்கிலம் கற்றனர்

ஆங்கிலம் கற்பதால் என்ன
முக்கிய அனுகூலம்
கிடைக்கிறது?

தற்காலத் தேவைக்கு வேண்டிய
எல்லாவிதமான அறிவும்
ஆங்கிலத்தில் எழுதப்பட்ட
புத்தகங்களில் தான் உள்ளன.

கப்பல் மூலம் விரைவில்
சாமான்களை பலநாடுகளுக்கு
அனுப்ப முடிகிறது

ஜெட் விமானங்கள் மூலம் பல
நாடுகளுக்கு சீக்கிரத்தில்
போய் சேரலாம்

மேலும் மிக முக்கியமாக
இண்டர்நெட் வசதி

அமெரிக்காவில் இருப்பது
மாதிரி மற்ற நாடுகளிலும்
அதிகரித்துள்ளது

மேற்கூறிய மாற்றங்களால் மற்ற
நாடுகளில் அமெரிக்க
தொழிலாளர்கள்
செய்யக்கூடியது மாதிரி
அங்குள்ள தொழிலாளிகளும்
வேலைகளை
செய்து பண்டங்களையும்
சேவையைகளையும் அளிக்கமுடிகிறது

அறிவு , மூளையைப் பயன்படுததி
எநத சேவையையும் எந்த
நாட்டிலும் செய்யமுடியும்
என்கிற நிலமை வந்துள்ளது.

அமெரிக்காவில் ஒரு அரைகுறை
படிக்கத் தெரிந்த
தொழிலாளிக்கு ஒரு மாதத்திற்கு
50 ஆயிரம் ரூபாயாவது (6*8/day) கொடுக்கவேண்டும.

அந்த பணத்தை வைத்து
இந்தியாவில் இரண்டு ஐ ஐ டி
படித்த பொறியியலாளர்களை
வேலைக்கு அமைக்க முடியுமே.

மேலும் இந்திய தொழிலாளிகளுக்கு மருத்துவ
செலவு கொடுக்கவேண்டாம்

அவர்களுக்கு ஒய்வூதிய பணம்
கொடுக்கவேண்டாம்

அவர்களது ஓய்வுகால மருத்துவ
காப்புறிமைக்கு பணம் கட்டவேண்டாம்

வேலையில்லா இன்ஷுரன்சு வரி
கட்டவேண்டாம்

இதே நிலமைதான் சீனாவிலும்

ஆகவே அமெரிக்காவில் பல
பண்டங்களை தயாரிக்கும்
நிறுவனங்களெல்லாம்
மூடின. அமெரிக்க நிறுவனங்கள்
பல நாடுகளில் பண்டங்களை
தயாரிக்க ஆரம்பித்தனர்

ஆனால் அப்பண்டங்களை
அமெரிக்காவில்தான் விற்றனர்

அமெரிக்க மக்களின் தேவைக்கான
சேவையை மற்றவர்கள் அளிக்க
ஆரம்பித்தனர்

அப்போது அமெரிக்க ஊழியர்கள்
எங்கிருந்து பணம்
பண்ணினார்கள். எவ்வாறு வெளிநாட்டிலிருந்து
வரும் பண்டங்களுக்கும் சேவைக்கும் பணம் கட்டினார்கள்?

கடன் வாங்கிதான்

கடன் அட்டை

வீட்டை அடமானம் வைப்பது

ஃபைணான்ஸ் கம்பெனியிடம் பணம் வாங்குவது

இதற்கெல்லாம் யார் பணம்
கொடுத்தார்கள்

வெளிநாட்டவர்கள். குறிப்பாக பணம் சேமித்த
சீனர்கள், சப்பானியர்கள்

அமெரிக்கவங்கிகள் பலவித கடன்களை பாண்டு
மாதிரியாக்கி எல்லோருக்கும்
விற்றார்கள்

உலகத்தவர் இதையெல்லாம்
புரிந்துகொள்ளாமல்

கடனளித்து திவாலகி
வருகின்றனர்

முன்னேறிவரும் நாடுகள்
முன்னேறிய நாடுகளுக்கு
கடனளித்து திவாலாகி
வருகின்றனர்

இது நிஜமாகவே வினோதமான
நிலமைதான்.

இந்த மாதிரி கடன் வாங்கியே
வாழும் வாழ்க்கையை அமெரிக்க
வங்கிகள்

மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி
செய்து பலன் அடைந்தார்கள்

அமெரிக்க வங்கிகள் "தாம் தீம் "
னு கடன் கொடுத்து அரசு, மற்றும்
மக்களின் பணத்தை
விரயப்படுத்தினார்கள்

இம்மாதிரி கட்டுப்பாடு
இல்லாமல் நிறுவனங்கள் செய்து
வந்ததை யாரும்
கண்டுகொள்ளவில்லை

ஆனால் இப்போது என்னவாயிற்று

எல்லோரும் உஷாராகி
வருகின்றனர்

எங்கும் பணமில்லை, எல்லோரும்
பிறருக்கு கடன்கொடுக்க
தயங்குகிறார்கள்.தமது வேலை காணாமல் போய்விடுமோ
என்று பயந்து மக்கள் கடனெடுக்க பயப்படுகிறார்கள்

மத்திய அரசு எக்கச்சக்கமாக
கடன் வாங்கி வங்கிகளை
தாங்கிக் கொண்டு வருகிறது

ஸ்டாக் பாண்ட், ரியல் எஸ்டேட்
மதிப்புகள் மிகக்குறைந்து
வருகின்றன

பலவித சொத்துகளின் மதிப்பு
குறைந்துகொண்டே வருகிறது.

பண்டங்களை வாங்குவார்
குறைந்துள்ளனர்

கடைகள், கம்பெனிகள் பண்டங்களை
விற்கமுடியாமல் தங்களது
நிறுவனங்களை மூடிவிட்டனர்

வேலையில்லாத் திண்டாட்டம்
அதிகரித்து வருகிறது

ஏதாவது கம்பெனி 100 வேலையாட்கள்
வேண்டும் என்று விளம்பரம்
செய்தால்

10000 பேர் குயூவில்
நிற்கின்றனர்

வரிப்பணம்
குறைந்துவிட்டதால் லோக்கல்
அரசுகள் தவிக்கின்றன

10 சதவீத மக்கள் அரசு உணவு
அளிப்பை நம்பியுள்ளனர்

ரோடு வாசிகள் (வீடு இல்லாதோர்) தொகை அதிகரித்து
வருகின்றது.

இந்த நிலமை 2009ல் இன்னும்
மோசமாக இருக்கும்
என்கின்றனர்

ஆகவே இப்போது வேலையில்
உள்ளவர்கள் பணத்தை செலவு
செய்யாமல் சேமித்து
வருகின்றனர்

வேலையினமை கிட்டதட்ட 8%
ஆகிவிட்டது அது 10% ஆகலாம் என்று
யூகிக்கின்றனர்.

ஆகவே இப்போது அமெரிக்காவில்
உயர் படிப்பு உயர் பயிற்சி
பெற்றாலும் வேலை கிடைப்பது
சிரமமாகிவிட்டது. இந்த
நிலமையால் மக்களின் மனோபாவம்,
நடத்தை எல்லாம்
மாறிவருகிறது.

ஒரு காலத்தில் ரோடில் தேனும் பாலும்
ஓடி வந்த அமெரிக்காவில்

வேலையின்மையும் வறுமையும்
அதிகரித்து வருகின்றது

அமெரிக்கர்கள் புதிதாக
தேர்வு செய்யப்பட்ட அதிபர்
ஒபாமா வந்த பிறகு
நிலமை மாறக்கூடும்
என்கிற மிகப் பெரிய
நம்பிக்கையுடன் 2009 ஆண்டு
வருகையை எதிர்நோக்கி
வருகிறார்கள்

இந்தியாவில் அதிக கடன் வாங்கி
அமெரிக்காவில் மேற்படிப்பு
படித்து அமெரிக்கவில்
சம்பாத்தியம் செய்து ஈடு
பண்ணலாம் என்று நினைப்பவர்கள்
உஷாராக இருக்கவேண்டும்

ஏனெனில் வேலை வாய்ப்பு இங்கு
முன்னிருந்தமாதிரி இல்லை

இண்டி ராம்