Monday, December 31, 2007

காயத்ரி மந்திரத்தைப் பற்றிய தவறான எண்ணங்களை கைவிடவேண்டும்

தமிழக பிராமணர்கள் அல்லாத இந்துக்கள்
காயத்ரி மந்திரத்தைப் பற்றிய தவறான எண்ணங்களை
கொண்டுள்ளார்கள்

என்ன அவைகள்

(1) பிராமணர்கள் அல்லாத மற்ற இந்துக்கள் அந்த மந்திரத்தை ஜபிக்கக்கூடாது

(2) மனசுக்குள்ளேயெ சொல்லிக் கொள்ளவேன்டும்

(3) காலை நேர்த்தில் தண்ணீர் தேக்கத்திலேயே அல்லது ஆற்றின் கரையிலேயே தான்

ஜபிக்கவேண்டும்

(4) அந்த மந்திரத்தை மற்றவர்கள் கேட்கும் அளவுக்கு பலமாக உச்சரித்தால் அதன்

மகிமை போய்விடும்

காயத்ரி மந்திரத்தின் அர்த்தம் என்ன

அதற்கு ஒவ்வொரு சமஸ்கிருத மொழிபெயர்ப்பாளரகளும், படித்தவரகளும்

ஒவ்வொன்று கூறுகின்றனார்

ஆகவே எது தான் சரியானது என்பது சர்ச்சைக்குரியதே

இருந்தாலும் எல்லா வியாக்கியானங்களிலும் பொதுவாக ஒரே கருத்துள்ளதே

சமஸ்கிருத மூலம்

ஓம் பூர் புவா ஸ்வா
தத் சவித்தூர் வேரேன்யம் பர்கோ
தேவஸ்ய தீமஹி
தியோய ன பிரசோயதாத் ஓம்

ஒரு தமிழாக்கம்

இம்மூவுலுகங்களை (பூமி, ஆகாயம், கீழ் (மேல்) உலகம்)
காப்பவனே (ளே) எல்லோராலும் போற்றப்படுபவேன (ளே)
சூரியனாகக் காட்சியளித்து உனது வெளிச்சம் என்னுள் புகுந்து
என் மனதையும் என்னுள் உள்ள உயிரையும் உன்னைப்பற்றி தியானிக்க
அருள்புரிவாயாக

இதை ஆழ்ந்து சிந்தித்தால் இந்துக்கள் அல்லாதோர்

கூட தினந்தோறும் சொல்லலாம்

(like the Christian's Lord's Prayer)

வடக்கத்திய எல்லா இந்துக் குழந்தைகளும் இந்த மந்திரத்தை சொல்லுகின்றனர்

அவர்கள் பஜணை செய்யும் "தூன்" களில் இந்த மந்திரம் முக்கியமானது

அவர்களது கல்யாணச் சடங்குகளில் இந்த மந்திரத்தை மூன்று தடவையாவது
சொல்கிறார்கள்

கீதா மண்டலில் பயிலும் எல்லா குழந்தைகளும்

( பிராமணர் பிராமணர் அல்லாதோர்) இந்த மந்திரத்தை

முதல் மந்திரமாக ஜபிக்கிறார்கள்

ஆகவே தமிழக எல்லா இந்துக்களும் இதை ஜபிப்பதைப் பற்றிய தவாறான எண்ணங்கள்

கொண்டுள்ளதை கைவிடவேண்டும்

இண்டி ராம்

Sunday, December 30, 2007

புதியன கற்கவேண்டும்

சற்றுமுன்னில் வெளிவந்த செய்தி

துபாய் சோனாப்பூர் தொழிலாளர் முகாம் அருகில்
எமிரேட்ஸ் சாலையை கடக்க முயன்ற இரண்டு
தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். இவர்கள்
பெரும்பாலும் இந்தியத் தொழிலாளர்களாகவே இருப்பர் என கருதப்படுகிறது.

-----------------------------------------------------------------------------------------------------------

சென்னையில் பல இடங்களில் மக்கள்
சாலையின் ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கத்திற்கு
போக பெடஸ்டிரியன் கிராசிங்க் (பாதசாரி கடக்குமிடம்) இடம்
ஒதுக்குவதில்லை. மக்கள் இரண்டுபக்கமும் பார்த்து
திடிர்னு உயிரையே கையில் பிடித்து கடக்கவேண்டும். வெளிநாடுகளில்
எல்லாம் இம்மாதிரி பாதசாரி கடக்கும் இடங்கள்
நல்ல படியாக குறிப்பிட்டிருப்பதால்
மக்களுக்கு அது நன்றாகப் பழகிவிட்டது
கார் ஓட்டிகளும் அந்த இடங்களில்
காரை நிறுத்தி மக்கள் சாலையை கடக்கும்வரை
பொறுமையாக உள்ளனர்.
மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் பாதசாரி கடக்கும்
இடங்கள் ஒவ்வொரு வீதி சந்திப்புகளில் உள்ளன.
சென்னை பாண்டி பசாரில் அவதானித்துபாருங்கள்
மௌண்ட் ரோடில் பாதசாரிகள் கடக்கும் இடங்கள் அரை கிலோமீட்டரில்
தான் இருக்கும். இன்னும் சில மாநகரங்களில் பாதசாரிகள்
பாதுகாப்பாக கடக்கும் இடமே கிடையாது
இம்மாதிரி சாலை ஒழுங்குத்தன்மை கடைபிடிக்காத
சமுதாயத்தில் இருந்து வெளிநாடு செல்வோர்
தங்களுக்குத் தெரிந்த ஒழுங்கை கடைபிடித்து
கண்ட கண்ட இடங்களில் சாலையை கடக்கமுயற்சித்து
பலியாகுகிறார்கள்.

நாம் எவ்வளவு மாறி 21 நூற்றில் வாழவேண்டியிருக்கிறது

இண்டி ராம்

கோலாகல உணர்வை எப்போது ஏன் இழந்தோம்?

கோலாகல உணர்வான கொண்டாட்டம் ஏன், எப்போது, வழக்கொழிந்தது?

இது எனக்கு புரியாத புதிர்

தமிழ் நாட்டில் ஆங்கிலப் புத்தாண்டு

தமிழ்ப் புத்தாண்டு

ஆகிய இருநாட்களிலும் மக்களின்

நடத்தையை அவதானியுங்கள்

ஆங்கிலப் புத்தாண்டு நாளில் சமூகத்தில் ஒரு கோலாகத் தோனியிருப்பதை

காணலாம். ஆனால் தமிழ்ப் புத்தாண்டில் கோயிலுக்கு

போவதையும் வட பாயாசம் மேலும் திரைப்படங்கள்

பார்ப்பதும் தான் நடக்கிறது

ஒரு கோலாகல உணர்வு எங்கும் பார்க்கமுடியாது

அதே போல சித்திரா பௌர்ணமி ஒரு காலத்தில்

காதலர் தினமாக இருந்தது

ஆனால் இக்காலத்தில் வேலண்டைன்ஸ் டே தான் அமர்க்களமாகக்

கொண்டாடப்படுகிறது

இது மாதிரி தமிழ் கலாச்சாரத்தில் கொண்டாட்ட உணர்வில்லாமல்

இருப்பதன் காரணமென்ன (holidays are commemorated than celebrated)

வட மாநிலங்களில் ஹோலி , பைசாக்கி, நவராத்திரி சமயங்கள்

ஆகிய நாட்களில் பலர் ஆடிப் பாடி தங்கள் மகிழ்ச்சியுணர்வை

வெளிக்காட்டுகிறார். தமிழர்கள் எப்போது ஒரு inhibited சமுதாயாமானார்கள்

அமெரிக்காவில் சுதந்திர தினத்தன்று எல்லா ஊர்களிலும்

எல்லா மக்களும் ஏற்றத்தாழ்வு பார்க்காமல், காண்பிக்காமல்

ஒன்று சேர்ந்து இயல்பாக கொண்டாடுகிறார்கள்

அரசுத் தலைவர்களோ அரசு நடத்தும் நிகழ்ச்சியோ

கிடையாது

நமக்குள் இருக்கும் கோலாகல உணர்வு வெளிநாட்டில் இருந்து

வந்துள்ள நாட்களில் தான் வெளிக்காட்டப்படுவது மனதில் ஒரு

புரியாத புதிரைத்தான் உருவாக்குகிறது

இண்டி ராம்

Monday, December 24, 2007

யூனிகோட் தமிழுக்கு தாவினால் என்ன பயன்?

ஆம் உறுப்பினர்கள் பங்கேற்பு பொங்க, மடலாடல் குழுக்களில் கடிதப்பரிமாற்றம் அதிகரிக்கவாய்ப்புள்ளது

எப்படின்னு கேட்கிறீங்களா

(1) தமிழ் மண வலைப்பூக்கள் திரட்டியில் ஆயிரக்கணக்கான விஷயங்கள்எழுதப்படுகின்றன (வலைபூக்கள் மூலம்)

அவைகளை வெட்டி ஒட்டி சிரமமில்லாமல் அனுப்பலாம்

அவைகளை அலசல் செய்யலாம்.

(2) சிலர் வலைப்பூவில் எழுதும் விஷயங்களை கொசுறுக்காக இங்கேயும் ஒட்டி அனுப்பலாம்

(வலைப்பூ எழுத்தாளர்கள் எல்லாம்யூனிகோட் தமிழ் தான் பயன்படுத்துகின்றனர்)

(3) சில சிரமங்கள் இருந்தாலும் யூனிகோட் தமிழில் எழுதுவதுசுலபம்.

ஏனெனில் லதா தமிழ் எழுத்துரு நிறுவவேண்டிய அவசியமில்லைஅது எக்ஸ்பி ஆபரேட்டிங்க் சிஸ்டத்தில் உள்ளது.ஆகவே ஆபீஸ் கணினியில் கூட யூனிகோட் தமிழில் எழுதமுடியும்

எனக்கு நம்பிக்கையுள்ளது

இண்டி ராம்

Friday, September 07, 2007

ஓய்வு காலத்தை எப்படி எதிர்நோக்குவது?

முதுமைகால வாழ்க்கைத் திட்டம்.

அதைப் பற்றி நான் சில கருத்துக்களை சொல்லப்போகிறேன்

சிலருக்கு அவைகள் பிடித்தமாக இருக்காது. ஏனெனில் அவைகள் தமிழக மரபுக்கு

கலாச்சாரத்திற்கு சற்று மாறானவை

எனது அப்பா 60 களில் சொல்லி வந்தார். செய்தும் காட்டினார்.

அதாவது நாம் வயதானவுடன் கல்யாணமான குழந்தைகளின் வீட்டில் 3 நாட்களுக்கு மேல்

இருக்கக்கூடாது. ஏனெனில் அது அவர்களுடைய பிரத்யேக வாழ்க்கையை கெடுத்துவிடும்

நாம் நமது குழதைகளில் வாழ்க்கையில் புகமாட்டோம் என்று எவ்வளவு

தான் கங்கனம் கட்டினாலும்

அவ்வாறு செய்வதை தவிர்க்கமுடியாது (நமது உள்ளுணர்வு தாமரை

மேலுள்ள நீர் மாதிரி இருக்கவுடாது.

திருமணமானவர்கள் எல்லோரும் எப்போவது சண்டை போடுவார்கள் தான். அது சிலசமயம்

காரசாரமாகவும் பயமுறுத்துவதாகவும் இருக்கலாம்.

ஆனால் சில நாட்கள் கழித்து அவர்கள் சமாதானம் அடைவர். அது இயல்புதான்

ஆனால் ஒருவரது பெற்றோர்கள் இருந்தால் அவர்களை வக்காலத்துக்கு இழுத்துவிடுவார்கள்

பெற்ற உணர்வால் பெற்றோர்களால் ஈடுபடாமால் இருப்பதை தவிர்க்கமுடியாது.

பெற்றோர்கள் குழந்தைகளின் நலனுக்காகத்தான் ஈடுபடவிரும்புவார்கள்.


2. தற்காலத்தில் எல்லோரும் 2 பெட்ரூம் அபார்ட்மெண்டில் வசிக்கிறார்கள்

ஆகவே பெற்றோர்கள் தங்க வசதி கிடையாது. 3 நாட்களுக்கு எல்லோரும் பொறுமையாக

அட்ஜஸ்ட் பண்ணிக்குவாங்க.

மற்றும் பால், தண்ணீர், பாத்ரூம் பிரச்சனைகள் பெரிதாகிவிடும்

3. கூட்டுக்குடும்பம் தற்கால வாழ்க்கைக்கு உதவாது

அது தனிக்குடித்தனம் நடத்தும் குழந்தைகளின் வாழ்க்கைக்கு நல்லதும் அல்ல.

4. மேலும் பெற்றோர்கள் தானே இருக்கிறார்கள் என்று நினைத்து

சிலர் (கணவனோ , மனைவியோ) தங்களது பொறுப்பை கைவிட சாத்தியம் இருக்கிறது

5. தாம்பத்திய குழந்தைகள் தமக்கு பிடித்தமான செயலை செய்யமுடியாது

பெற்றோர்களையும் சேர்க்கவேண்டுமே என்ற நினைப்பு எப்போதும் இருக்கும்

6. தாம்பத்தியர் அசமாத்தாக எங்குவேண்டுமானலும் (வீட்டில்) கட்டிப்பிட்ப்பதையோ,

முத்தமிடுவதையோ, உடலுறவு கொள்வதோ

சங்கடமாகப் போய்விடும். அதாவது அவர்களது பிரைவசி பறந்து போய் விடும்

7. எனது அப்பா 1960 லேயே மூன்று நாட்களுக்கு மேல் தனது

திருமணமான குழந்தைகளுடன் இருந்தது கிடையாது

8. எனது அண்ணன் அக்காக்கள் கூட இப்போது அவர்களது குழந்தைகளுடன் வேண்டுமென்றே

வாழ்வதில்லை.

9. கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்துவந்தவர்களுக்கு இது ஆச்சரியம் அளிக்கலாம்

10. மேலை நாடுகளில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் பள்ளிப்படிப்பு முடிந்ததும்

மேற்படிப்புக்கு அவர்களே கடன் எடுத்து படிக்கச் செய்கிறார்கள். தங்களது சம்பாத்தியத்தை

தங்களது ஓய்வுகால வாழ்க்கைக்கு சேமிக்கிறார்கள்

11. தாம் தீம் என்று கல்யாணச் செலவில் தமது சேமிப்பை செலவிடுவதில்லை

12. அதே மாதிரி லட்சக்கணக்காக பணம் செலவிட்டு பிரத்யேக மருத்துவ அல்லது பொறியியல்

கல்லூரிப் படிப்பிறகாகச் செலவிடுவதில்லை

13. ஓய்வடைபவர்கள் பல இண்டரஸ்ட்களில் ஈடுபடவேண்டும்

14 தமது குழந்தைகளில் வாழ்க்கையில் ஈடுபட்டு இருக்கவேண்டும் என்பதை நினைக்கக்கூடாது

15. உடல் நலம் குன்றாமல் இருந்தால் தாமே தனியாக வாழ மனதை திடப்படுத்திக்கொள்ளவேண்டும்

16. முதியோர் இல்லம் என்பது வெறுக்கத்தக்க இடம் அல்ல என்ற அபிமானத்தை உருவாக்கிக்கொள்ளவேண்டும்.

ஆம் கால மாற்றத்திற்கேற்ப நாம் கொஞ்சம் கொஞ்சமாக நமது

வாழ்க்கை விதங்களை மாற்றிக்கொள்ளவேண்டும்.

17. சில கணவன்மார்கள் தமது பெற்றோருக்கு மனைவி அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்ளவேண்டும்

என்று எதிர்பார்க்கிறார்கள் ஆனால் அதேமாதிரி தமது மனைவியின் பெற்றோர்களுக்கு

தமது அட்ஜஸ்ட்மெண்டை அளிப்பார்களா.

இதையெல்லாம் நாம் சிந்தித்து ஆராயவேண்டும், எழுதவேண்டும், மற்றவர்கள் மனதில்

இடம்பெறவைக்கவேண்டும். இவைகளெல்லாம் தர்மசங்கடமான விஷயங்கள்

பலர் இதைப் பற்றி சிந்திக்காமல் இருப்பதே நலம் என்று கூட நினைப்பார்கள்.

Change is the only thing that is constant.

இண்டி ராம்

Sunday, August 19, 2007

சினிமாவில் மது அருந்தும் காட்சி. அதன் தாக்கம்

எல்லா இந்திய சினிமாப் படங்களில் (குறிப்பாகத் தமிழ்ப் படங்களில்)
சில ஃபிரண்ட்ஸ் சேர்ந்து மது அருந்தும் காட்சி
அல்லது காதலில் தோல்வி அடைந்த ஹீரோ மது அருந்துவது
அல்லது வில்லன் ஒரு னைட்கிளப் பில் சதிதீட்டும்போது
மது அருந்துவது ஆகிய எல்லா காட்சிகளிலும்

மது அருந்துபவர் ஒரு லாயக் கில்லாதவர்
அளவுக்கதிகமாகக் குடிப்பவர்
கன்னாபின்னாவென்று பிதட்டுபவர்
குடித்து விட்டு வாந்தி எடுத்து செத்துப்போபவர்
குடிபோதையில் கொலை செய்பவர்
குடிபோதையில் பெண்டாட்டியையும் குடும்பத்தையும்
உதைத்து முரட்டுத்தனமாக நடந்துகொள்பவர்

என்று மது குடித்தலைப் பற்றி தவறான மனோபிம்பத்தை
படம் பார்ப்பவர்களின் மனதில் உருவாக்குகின்றனர்.
பார்ப்பவர்களும் அதை நம்புகின்றனர்.

நான் பல வருடங்களாக வெளிநாட்டில் வசித்துள்ளேன்

சில நண்பரகளை பார்டிக்கு கூப்பிடும்போது
அல்லது அவர்கள் வீட்டிற்கு செல்லும்போதோ
ஒன்றோ இரண்டோ பீர் அல்லது விஸ்கி
அருந்தி கொஞ்சம் ரிலாக்ஸாகி பேசிப் பழகி வந்துள்ளேன்

ஆனல் ஒரு பொழுதும் நானோ என் நண்பர்களோ
மதுவின் தாக்கத்தால்
தப்பாகப் பேசியதோ நடந்துகொண்டதோ இல்லை.
கல்யாண உபசரிப்பு விழாக்களில் மது வழங்குகிறார்கள்.

அவ்வப்போது தமிழ் நாடு செல்கையில் யாராவது
ஒரு பீர் கொடுத்தால் (கோடைகாலத்தில்)
நான் அதை எடுத்துக்கொண்டால் என் உறவினரெல்லாம்
எதோ நான் கெட்டுபோய்விட்டதாக கண்பிதுங்க பார்த்து
என்னை சங்கடமடைய வைக்கிறார்கள்

இதற்குக் காரணம் சினிமா, டிவி படங்களில்
மது அருந்துவதை தவறாகச் சித்தரிப்பதால் தான்
என்று நான் கருதுகிறேன்.

இந்த நிலமையை மாற்ற முடியாதா?

சிலபேர் அளவில்லாமல் மது அருந்தாலாம்
ஆனால் பெரும்பாலான வெளிநாடு வாழும்
தமிழர்கள் பொறுப்பாகத் தான் மது அருந்து
கின்றனர் என்பது என் அவதானிப்பு.

ஐரோப்பா, இங்கிலாந்து, அமீரக, மலேசிய சிங்கை, சிறீலங்கா
தமிழர்களின் அனுபவம் என்னவோ?

இண்டி ராம்

Thursday, August 16, 2007

வலைப்பூக்கள் மலர்கின்றன மடலாடல் குழுக்கள் வாடுகின்றன, ஏன்?

வலைப்பூக்கள் மலர்வதன்
மடலாடற்குழுக்கள் வாடுவதன்
காரணங்கள் என்னென்ன எனபதைப் பற்றிய

என் எண்ணங்கள்.

தமிழில் எழுதவிரும்பும் ஒரு எழுத்தாளனுக்கு
வலைப்பூக்கள் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

வலைப்பூ எழுத்தாளர்கள் ஒரு "சீரியசான" வாசகத்தை எழுதுகிறார்கள்
அவர்கள் ஒரு தலைப்பில் பல வாக்கியங்களைக் கொண்ட பதிவுகளை
கோர்வையாக எழுதி பதிவிடுகிறார்கள்.

வார்த்திற்கு ஒரு முறை ஏதாவது தலைப்பில் எழுதுகிறார்கள்.

பிளாக்கர் டாட் காமில் எழுதிய பிறகு தமிழ் மணம் மூலம் உலகத்தாருக்கு
தெரியப்படுத்துகிறார்கள்

ஆகவே அவர்கள் எழுதுவது பலகோடிக்கணக்காரின்
பார்வைக்கு சென்றடைகிறது

(மடலாடற்குழுவில் உறுப்பினர்கள் தொகை குறைவுதான்)

(மடலாடற்குழுவில் பதில் அளிக்க முதலில் உறுப்பினராக வேண்டும்)

(வெவ்வேறு மடலாடல் குழுக்கள் வெவ்வேறு எழுத்துரு பயன்படுத்துகிறார்கள் ஊ.ம் திSகி
தமிழ் உலகம்)

வலைப்பதிவுகள் பெரும்பாலும் யூனிகோட் தமிழில் தான் உள்ளது.

வலைப்பதிவாளர்களுக்கென்று பதில் அளிப்பவர்கள்
வலைப்பதிவாளரின் கோ?டி வாசகர்களாகி பதிவாளர்-வாசகர் உறவு
அன்னியோன்யமாகிவிடுகிறது. அது பதிவாளர்களுக்கு இதமாகவுள்ளது.
சில வாசகர்கள் தங்களது வாசகத்தை சட்டைபண்ணி படிக்கிறார்கள்
பின்னூட்டலும் தருகிறார்கள் என்று உணர்ந்து மனநிறைவடைகிறார்கள்

(மடலாடற்குழுவில் ஒவ்வொருவரும் தமக்கி?டப்பட்டதை எழுதுகிறார்கள்
கருத்துத் தொடர்ச்சியில்லை)

வலைப்பதிவாளர் சுயமாகத் தான் விரும்பிய தலைப்பில் வேண்டும்பொழுது எழுதுகிறார்

வலைப்பதிவாளர் தான் விரும்பினால் படங்களையும், ஒலியையும் இணைத்துக் காட்ட
முடியும்

(மடலாடல் குழுக்களில் அட்டாச்மெண்ட் கிடையாது)

வலைப்பதிவாளர் சில வாசகர்களிடமிருந்து பதில் வராமல் தன் எழுத்தை

பாதுகாத்துக்கொள்ளமுடியும்.

வலைப்பதிவாளர்களின் மின்னஞ்சல் பெட்டியில் பல கடிதங்கள் விழுவதில்லை.


இவ்வாறு பலவிதங்களில் வலைப்பதிவு வேறு பட்டு இருப்பதால்

நாலெழுத்து எழுதத் தெரிந்தவர்கள் வலைப்பதிவு தயாரித்து

எழுதும் ஆசையை நிறைவேற்றிக்கொள்கிறார்கள்.


சில விSவாசமான வாசகர்களின் நெருங்கிய சுகமான உறவில்

மன நிறைவுபெறுகிறார்கள்.

இண்டி ராம்