Sunday, August 19, 2007

சினிமாவில் மது அருந்தும் காட்சி. அதன் தாக்கம்

எல்லா இந்திய சினிமாப் படங்களில் (குறிப்பாகத் தமிழ்ப் படங்களில்)
சில ஃபிரண்ட்ஸ் சேர்ந்து மது அருந்தும் காட்சி
அல்லது காதலில் தோல்வி அடைந்த ஹீரோ மது அருந்துவது
அல்லது வில்லன் ஒரு னைட்கிளப் பில் சதிதீட்டும்போது
மது அருந்துவது ஆகிய எல்லா காட்சிகளிலும்

மது அருந்துபவர் ஒரு லாயக் கில்லாதவர்
அளவுக்கதிகமாகக் குடிப்பவர்
கன்னாபின்னாவென்று பிதட்டுபவர்
குடித்து விட்டு வாந்தி எடுத்து செத்துப்போபவர்
குடிபோதையில் கொலை செய்பவர்
குடிபோதையில் பெண்டாட்டியையும் குடும்பத்தையும்
உதைத்து முரட்டுத்தனமாக நடந்துகொள்பவர்

என்று மது குடித்தலைப் பற்றி தவறான மனோபிம்பத்தை
படம் பார்ப்பவர்களின் மனதில் உருவாக்குகின்றனர்.
பார்ப்பவர்களும் அதை நம்புகின்றனர்.

நான் பல வருடங்களாக வெளிநாட்டில் வசித்துள்ளேன்

சில நண்பரகளை பார்டிக்கு கூப்பிடும்போது
அல்லது அவர்கள் வீட்டிற்கு செல்லும்போதோ
ஒன்றோ இரண்டோ பீர் அல்லது விஸ்கி
அருந்தி கொஞ்சம் ரிலாக்ஸாகி பேசிப் பழகி வந்துள்ளேன்

ஆனல் ஒரு பொழுதும் நானோ என் நண்பர்களோ
மதுவின் தாக்கத்தால்
தப்பாகப் பேசியதோ நடந்துகொண்டதோ இல்லை.
கல்யாண உபசரிப்பு விழாக்களில் மது வழங்குகிறார்கள்.

அவ்வப்போது தமிழ் நாடு செல்கையில் யாராவது
ஒரு பீர் கொடுத்தால் (கோடைகாலத்தில்)
நான் அதை எடுத்துக்கொண்டால் என் உறவினரெல்லாம்
எதோ நான் கெட்டுபோய்விட்டதாக கண்பிதுங்க பார்த்து
என்னை சங்கடமடைய வைக்கிறார்கள்

இதற்குக் காரணம் சினிமா, டிவி படங்களில்
மது அருந்துவதை தவறாகச் சித்தரிப்பதால் தான்
என்று நான் கருதுகிறேன்.

இந்த நிலமையை மாற்ற முடியாதா?

சிலபேர் அளவில்லாமல் மது அருந்தாலாம்
ஆனால் பெரும்பாலான வெளிநாடு வாழும்
தமிழர்கள் பொறுப்பாகத் தான் மது அருந்து
கின்றனர் என்பது என் அவதானிப்பு.

ஐரோப்பா, இங்கிலாந்து, அமீரக, மலேசிய சிங்கை, சிறீலங்கா
தமிழர்களின் அனுபவம் என்னவோ?

இண்டி ராம்

Thursday, August 16, 2007

வலைப்பூக்கள் மலர்கின்றன மடலாடல் குழுக்கள் வாடுகின்றன, ஏன்?

வலைப்பூக்கள் மலர்வதன்
மடலாடற்குழுக்கள் வாடுவதன்
காரணங்கள் என்னென்ன எனபதைப் பற்றிய

என் எண்ணங்கள்.

தமிழில் எழுதவிரும்பும் ஒரு எழுத்தாளனுக்கு
வலைப்பூக்கள் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

வலைப்பூ எழுத்தாளர்கள் ஒரு "சீரியசான" வாசகத்தை எழுதுகிறார்கள்
அவர்கள் ஒரு தலைப்பில் பல வாக்கியங்களைக் கொண்ட பதிவுகளை
கோர்வையாக எழுதி பதிவிடுகிறார்கள்.

வார்த்திற்கு ஒரு முறை ஏதாவது தலைப்பில் எழுதுகிறார்கள்.

பிளாக்கர் டாட் காமில் எழுதிய பிறகு தமிழ் மணம் மூலம் உலகத்தாருக்கு
தெரியப்படுத்துகிறார்கள்

ஆகவே அவர்கள் எழுதுவது பலகோடிக்கணக்காரின்
பார்வைக்கு சென்றடைகிறது

(மடலாடற்குழுவில் உறுப்பினர்கள் தொகை குறைவுதான்)

(மடலாடற்குழுவில் பதில் அளிக்க முதலில் உறுப்பினராக வேண்டும்)

(வெவ்வேறு மடலாடல் குழுக்கள் வெவ்வேறு எழுத்துரு பயன்படுத்துகிறார்கள் ஊ.ம் திSகி
தமிழ் உலகம்)

வலைப்பதிவுகள் பெரும்பாலும் யூனிகோட் தமிழில் தான் உள்ளது.

வலைப்பதிவாளர்களுக்கென்று பதில் அளிப்பவர்கள்
வலைப்பதிவாளரின் கோ?டி வாசகர்களாகி பதிவாளர்-வாசகர் உறவு
அன்னியோன்யமாகிவிடுகிறது. அது பதிவாளர்களுக்கு இதமாகவுள்ளது.
சில வாசகர்கள் தங்களது வாசகத்தை சட்டைபண்ணி படிக்கிறார்கள்
பின்னூட்டலும் தருகிறார்கள் என்று உணர்ந்து மனநிறைவடைகிறார்கள்

(மடலாடற்குழுவில் ஒவ்வொருவரும் தமக்கி?டப்பட்டதை எழுதுகிறார்கள்
கருத்துத் தொடர்ச்சியில்லை)

வலைப்பதிவாளர் சுயமாகத் தான் விரும்பிய தலைப்பில் வேண்டும்பொழுது எழுதுகிறார்

வலைப்பதிவாளர் தான் விரும்பினால் படங்களையும், ஒலியையும் இணைத்துக் காட்ட
முடியும்

(மடலாடல் குழுக்களில் அட்டாச்மெண்ட் கிடையாது)

வலைப்பதிவாளர் சில வாசகர்களிடமிருந்து பதில் வராமல் தன் எழுத்தை

பாதுகாத்துக்கொள்ளமுடியும்.

வலைப்பதிவாளர்களின் மின்னஞ்சல் பெட்டியில் பல கடிதங்கள் விழுவதில்லை.


இவ்வாறு பலவிதங்களில் வலைப்பதிவு வேறு பட்டு இருப்பதால்

நாலெழுத்து எழுதத் தெரிந்தவர்கள் வலைப்பதிவு தயாரித்து

எழுதும் ஆசையை நிறைவேற்றிக்கொள்கிறார்கள்.


சில விSவாசமான வாசகர்களின் நெருங்கிய சுகமான உறவில்

மன நிறைவுபெறுகிறார்கள்.

இண்டி ராம்