Thursday, November 20, 2008

யுனித் தமிழில் எழுதுவது பற்றிய பட்டறை அமைப்போம்

கணினியிலும் இணையத்திலும் யூனித்தமிழில் எழுதுவது எளிது.

ஒருவர் என் பக்கம் இருந்தால் பத்து நிமிடங்களில்

அவருக்குத் தேவையான மென்பொருள், எழுத்துருக்களை அவரது கணினியில்

நிறுவி எந்தெந்த கீபோர்ட் பொத்தான்களை அமுக்கினால் எந்தெந்த

தமிழ் எழுத்துக்களை அடிக்கலாம் என்று சொல்லிக்காட்டிவிடிவேன்

தமிழகத்திலுள்ள (தமிழகம் மட்டுமென்ன எல்லா இடங்களிலும்

அதே கதிதான்... தமிழ் மட்டுமென்ன மற்ற இந்திய மொழி பேசுபவர்களின்

நிலமையும் அதே தான்) பெரும்பாலான கல்லூரி படிப்பு படித்தவர்கள்

தமிழில் (தங்களது இந்திய தாய் மொழிகளில்) எழுத விரும்புவதில்லை.

பெரும்பாலோர்க்கு

ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளில் எழுதுவதற்கு அவசியம் தோணுவதில்லை.

இதற்கு தாங்களெல்லாம் ( அடியேனும் உட்பட) விதிவிலக்குதான்.

இருந்தாலும்

"கணினியிலும் இணையத்திலும் தமிழில் எழுதுவோம்" என்கிற தலைப்பில்

ஒரு வொர்க் சாப் (பட்டறை) வருடத்திற்கு இரண்டு முறை ஒவ்வொரு தமிழக

மாவட்டங்களிலும் (இந்த வ்ருடம் தமிழகத்தில் எத்தனை மாவட்டங்கள்

குட்டிபோட்டிருக்கிறது என்று அறிந்தவர்கள் தெரிவிக்கவும்?).

ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள தமிழ் உலக நண்பர்கள்

"நான் உள்ளேன்" அய்யா என்று வெளிவந்து இந்த காரியத்தை

செய்வீர்களா?

பக்கத்திலுள்ள லைப்ரரி ( நூலகம்) அல்லது ஸ்கூல்களில்

( பள்ளிகளில்) இவற்றை நடத்திக்காட்டலாம்

ஒரு மனிதரின் (ஆண், பெண்) ஆள் மனதில் உள்ள எண்ணங்கள்,

ஆக்கபூர்வமான கருத்துக்கள்

ஆலோசனைகள், வாழ்க்கை பயணஅனுபவங்கள் ஆகியவைகள் எல்லாம்

எழுத்துருவம் பெறவேண்டும். அவ்வாறு செய்தால் அது மற்றவர்களின்

அறிவை வளர்க்கும்.

அதை ஒருவரின் தாய்மொழியில்தான் நன்றாக வெளிக்கொண்டுவரமுடியும்

என்று பலர் சொல்லுகின்றனர்

ஆனால் தமிழர்களில் அல்லது மற்ற இந்திய மொழிபேசுபவர்களில்

பெரும்பாலோர் இந்த உண்மையை வெளிப்படுத்திக் காட்டாமால் இருப்பது

ஆச்சரியப்படவைக்கிறது, அந்த கூற்றையும் சந்தேகப் படவைக்கிறது.

ஒரு காலத்தில் " என்ன சார் எந்த ஐடியா இருந்து என்ன பிரயோஜனம்

எனது எழுத்தை எங்கும் பிரசுரிக்க முடியாது.. நூலாக அச்சடிக்க பணம்
ஜாஸ்தியாகும்"

ஆகிய சுய அலசல்கள் நம்முள்தோன்றி நம் உந்து சக்தியை வளரவிடாமல்

தடுத்து வந்தன

ஆனால் இக்காலத்தில் இணையம் வழியாக ஒருவருடைய சொந்த எண்ணங்களை

கருத்துக்களை கோடிக்கணக்கான ஜோடிக் கண்களுக்கு முன் வைக்க

வாய்ப்புள்ளதே

இருந்தபோதும் தமிழில் எழுதுபவர்கள், எழுதக்கூடியவர்கள்

எழுத விரும்புபவர்கள் தொகை இன்னும் அதீதமாக வளரவில்லையே

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆண்டுக்கு இரண்டுதடவை

பட்டறை வைத்து 'எனக்கு எப்படி எழுதுவது

என்பது தெரியாது" என்கிற சாக்கை எடுக்க முயற்சிக்கலாமே

நான் வசிக்கும் இடத்தில் ஆண்டுதோறும் தமிழ் பேசுபவர்கள்

மூன்று தடவை கூடுகிறார்கள்

அச்சமயம் யாராவது கணினியில் அல்லது இணையத்தில் தமிழில் எப்படி எழுதுவது

என்று அறிந்துகொள்ள விரும்பினால் எனது தொலைபேசி மூலம்

தொடர்பு கொள்ளுங்கள் என்ற அறிவிப்பை அச்சடித்து

வரவேற்பிடத்தில் போட்டுவிடுகிறேன்

இருந்தாலும் ஒன்று இரண்டு "கால்கள்" தான் வருகின்றன

இது தான் உண்மை நிலமை

ஆனால் நாம் தொடர்ந்து முயற்சி செய்யவேண்டும்

தங்களது கருத்து என்ன

இண்டி ராம்

2 comments:

யூர்கன் க்ருகியர் said...

இதைப்பற்றிய ஏதாவது லிங்க் இருப்பின் கொடுக்கவும்.
Google Tamil Transliterate - தான் இப்போதைக்கு துணை.
இதனால் எப்பொழுதும் எழதுவதற்கு இணைய இணைப்பு தேவைப்படுகிறது.

ram said...

எனது ஆங்கில வலைப்பூக்கு

சென்றால் அங்கு முழு விவரங்கள்

தெளிவாக விளக்கப்பட்டுள்ளன

http://indyramthoughts.blogspot.com/

இண்டிராம்