Wednesday, April 19, 2006

தமிழ் மொழி வளர என்னென்ன செய்யக்கூடாது

> தமிழ்வாழ உழைப்போர்க்குத்
> துணையாக இருப்பாய்!
> தமிழை யார் எதிர்த்தாலும்
> எழுவாய் நீ நெருப்பாய்! -- காசி ஆனந்தன்


எப்படி தமிழை வாழவைப்பது?


தற்கால வாழ்க்கைக்கு தேவையான

பயனுள்ள அறிவை தமிழில் உருவாக்கும் முயற்சியினால் தான்

தமிழ் வளரும.

வெறுமனே செம்மொழி என்று பட்டம் கொடுப்பதனால் அல்ல.

தற்காலத்தில் செம்மொழியென்று கூறப்படும் மொழிகள் எல்லாம்

வெறும் கெரவ மொழிகளாகிவிட்டன.

ஹிந்தி எழுத்துக்களை அழிப்பதாலும.

மத்திய அரசை குறைகூறுவதாலும்

ஆங்கில வாசகப் பலகை களுக்கு தார்ப்பூச்சு செய்வதாலும்

உண்ணாவிரதம் இருப்பதாலும்

தமிழ் காப்பாளன் கட்சி ஆரம்பிப்பதாலும்

வள்ளுவனுக்கு இன்னுமொரு 1330 அடி சிலை அமைப்பதாலும்

தமிழ் மொழி வளராது

மத்திய வகுப்பினர், செல்வாக்கு மிகுந்த மேலை வகுப்பினர் எல்லாம் தமிழை ஒரு பாடமாவது மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் கற்காமல் இருந்தால் தமிழ் வளரவே வளராது

மக்களின் அடிப்படை தேவை

வாழ்க்கை நடத்த பணம்

அந்த பணத்தை ஈட்டும் வேலைக்குத்தேவையான அறிவு, தொழில்நுட்பம், வெளிப்படுத்தும் திறமைஆகியவற்றை தமிழ் மூலம் பெற வழிவகுக்கவேண்டும்

தமிழ் ஒரு பொழுதுபோக்குக்கு உதவும் அறிவை கொண்ட மொழி என்ற நிலைமையை மாற்ற

படித்த தமிழர்கள் முயற்சிக்கவேண்டும்

இண்டி ராம்

No comments: