Thursday, January 03, 2008

இந்தியர்களின் தகவல் தொழில் நுட்ப சூட்சமத்தின் காரணங்கள் என்னென்ன

தகவல் தொழில்நுட்பத்தில் இந்தியர்கள்

குறிப்பாக தென் இந்தியர்கள்

சப்பானியர்களை விட சாமர்த்தியமாகிவிட்டார்களே

எப்படி?. அது அவர்கள் கல்விகற்கும் விதாமா

என்று சப்பானியரகள் குழம்பி வருகிறார்கள்.

அதைப் பற்றி ஜனவரி 2 ம்தேதி நியூ யார்க டைம்ஸில் ஒரு கட்டுரை

வெளிவந்தது.

அதற்கு காரணம் அவர்களது உயர்தர கல்வி கற்கும் அல்லது

கற்பிக்கும் முறையல்ல கணினியம் தென் இந்திய மனப்போக்குக்கு

மிகுந்த இயல்பான, பொருத்தமான துறை என்பது

பலருக்கு புரியாது

பாம்பின்கால் பாம்புக்குதான் தெரியுமல்லவா

இதோ என் புரிதாலை தங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்

----------------------------------------------------------------------------------------------------------

இது சில வருடங்களுக்கு முன்பு அமீரக தமிழ் இணைய நண்பர்கள்ஆண்டுவிழா ஒட்டிய

சிறப்பு வெளியீட்டில் வெளிவந்தது (2004)

------------------------------------------------------------------------------------------


கணினியமும் தென்னிந்தியர்களும்

(இண்டி ராம்)

கணினியம் என்றால் என்ன என்பதை நான் முதலில் தெளிவுறுத்த விரும்புகிறேன். கணினியத்தை ஆங்கிலத்தில் computing என்று சொல்கிறார்கள். கணினியம் என்றால் கணினி, (computer) இணையம் , (Internet) தகவல் தொழில்நுட்பம்(Information technology) ஆகிய அனைத்து அறிவுகளையும் உட்கொண்டது எனலாம். நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், கணினியத்துக்கும் தென்னிந்தியர்களுக்கும் (குறிப்பாகத் தமிழர்களுக்கும்) இயல்பாகவே ஓர் இணைப்புள்ளது. மீன்குட்டிக்கு நீந்தக் கற்றுக் கொடுக்கவேண்டிய அவசியமில்லை. அதேபோல் தமிழர்களுக்கு கணினியம் பற்றி சொல்லித்தரவேண்டிய அவசியமில்லை என்பது என் கருத்து. எந்தத் துறையில் தொழில் புரிந்தாலும் தமிழர்களுக்கு (அடியேன் உட்பட) கணினியத்தின் மேல் ஓர் அலாதிப் பிரியம் உள்ளது என்பது வெளிப்படையான விஷயம். கணினியத்தை அவர்களால் எளிதில் கற்றுக்கொள்ள முடிகிறது. இதைப் பற்றி நான் பல காலமாகச் சிந்தித்து வருகிறேன். சில சமயம் நான் கணினியம் தமிழர்களுக்கு அளிக்கப்பட்ட வரப்பிரசாதமாகக் கூட நினைப்பது உண்டு. கணினியத்துக்கும் தமிழர்களுக்கும் உள்ள ஈர்ப்புக்கான காரணங்கள் என்னென்ன என்பதைப் பற்றி இக்கட்டுரையில் அலச விரும்புகிறேன்.

கணினியம் மூளை சம்பந்தமான விஷயம்

1. தமிழர்களுக்கு மூளையைப் பயன்படுத்தி செய்கிற காரியங்கள் பிடித்தமானவை. உடம்பை வறுத்தி செய்யும் காரியங்கள் பிடிக்காதவை. இதனால்தனோ என்னவோ பெரும்பாலானத் தமிழர்களுக்கு கைசுத்தமாக வேலை செய்யத்தெரியாது. கணினியம் முளை சம்பந்தமான விஷயமாதலால் அது அவர்களுக்கு அல்வா துண்டுமாதிரி.

தர்க்க உணர்வு

2. தமிழர்களுக்கு தர்க்க உணர்வு (logical sense) இயல்பாகவே உண்டு. a+b=c என்றால் c-b=a என்பது அவர்களுக்கு சொல்லாமலேயே தெரியும். கணினியத்தில் புரண்டு விளையாட உயரிய கணித அறிவு அவ்வளவு தெரிய வேண்டியதில்லை. ஆனால், தர்க்க உணர்வு கட்டாயம் தேவை. அது இருந்தால் தான் தெரிவு தளத்தின் நுட்பத்தை உணர்ந்து செயல்பட முடியும்.

தனிப்பட்ட முறையில் வேலை செய்பவர்கள்

3. தமிழர்களுக்கு ஒன்று சேர்ந்து வேலை செய்து பழக்கமில்லை. இது சாதிக் கேட்டின் விளைவு என்றும் சொல்லலாம். ஒன்றாக இணைந்து சேர்ந்து ஒரு குறிக்கோளை சாதிக்கமாட்டார்கள். ஆனால் அவர்களைத் தானாக செயல்பட் விட்டால் திறமையாகச் செய்து காட்டுவார்கள். கணினிய வேலைகள் ஒவ்வொருவராலும் தானாகச் செயல்படுவதால் அது அவர்களுக்கு பிடித்தமான தொழில்.

செக்கு மாடு மாதிரி உழைக்கத் தயங்குவதில்லை

4. தமிழர்கள் சுவாரசியமில்லாத , நெடுநேரமெடுக்கும் வேலைகளைச் செய்யத் தயங்குவதில்லை. அதனால்தான் வெள்ளைக்காரன்கள் தமிழர்களை அவர்களுக்குத் தேவையான கிளார்க் பட்டாளமாக்கினார்கள். y2k மாதிரி தமிழர்கள் டைப்படிப்பதிலும், ஸ்டெனோ வேலை செய்வதிலும் ஆர்வமுள்ளவர்கள். புரோகிராம் எழுதுவது கொஞ்சம் சுவாரசியமில்லாத வேலைதான். ஆனால் சம்பாத்தியம் கிடைக்குதே என்று சமாதானப்படுத்தி வேலை செய்ய தமிழர்கள் தயங்குவதில்லை. மேலைநாட்டவர்களுக்கு எவ்வளவுதான் பணம் கொடுத்தாலும் y2k மாதிரியான வேலையை செய்ய விரும்ப மாட்டார்கள்.

குளுகுளு ஏசி

5. தமிழர்களுக்கு குளுகுளு ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு அப்பப்ப டீக்குடிச்சு, அல்லது தம்மடிச்சு வேலை செய்வது என்பது பிடித்தமான கனவு வேலை (dream job) விஷயம்.பெரிய கணினிகள் எல்லாம் குளுகுளு ஏசி அறையில் தான் வைக்கப்பட்டிருக்கும். ஆகவே இந்தமாதிரி சூழலில் வேலை செய்வது தமிழர்களுக்கு கரும்பு தின்பது மாதிரி தான்.

தன்னறிவு இன்றியமையாது

6. கணினியம் அறிவு ஒரு தொழிற்கூடத்தில் இன்றியமையாது. எனக்கு இது எப்படி பண்றது அது எப்படி பண்றது என்று சிலர் தெரியாமால் கணினியம் தெரிந்தவர்களை நாடிச் செலவார்கள். இது மாதிரி சிலருக்குத் தெரியாத கணினியல் அறிவை தான் பறை சாற்றுவது மனசுக்குள் திருப்தி யளிக்கும் செயல். ஆகவே கணினியம் எக்ஸ்பர்ட் என்பது அவர்களுக்கு பிடித்தமானது.

தானே கற்றறியும் திறமை

7. கணினியத்தில் பெரிய பெரிய செய்முறைப் புத்தகங்களைப் படித்து அதை கிரகித்து அதன் படி செய்யவேண்டிய கட்டாயம் உள்ளது. அதற்கு நுணுக்கமாகப் படிக்கும் திறமையும், இமாலயப் பொறுமையும் வேண்டும். அது இயல்பாகவே தமிழர்களுக்கு உண்டு.

தப்பு செய்து அறிவது

8. கணினியத்தில் அடிக்கடி தப்பு செய்து தான் நுணுக்கமாக வேலை செய்ய கற்றுக்கொள்ளவேண்டும். இம்மாதி கற்பதற்கு ரொம்ப பொறுமை வேண்டும். விடாப்பிடியா உட்கார்ந்து , மணிக்கணக்காக கணினி முன்னால் தவமிருக்கவேண்டும். இதில் தமிழர்கள் மாதிரி யாரும் இருக்கமுடியாது.

நல்லா டிரெஸ் பண்ணவேண்டாம்

9. கணினியத்தில் வேலை செய்பவர்கள் எல்லாம் தோற்றத்தை பற்றி கவலைப்படுவதில்லை. நல்ல தோற்றமுடன் இருக்க பணம் செலவு செய்யவேண்டும். அது தமிழர்களுக்கு வேண்டாத செலவாகத் தோன்றும். ஆகவே, நல்லா டிரெஸ் பண்ணாம போகக் கூடிய வேலையான கணினியம் தொழில் அவர்களுக்கு பிடித்தமான விஷயம்.

நாலு பேரோட பேசிப் பழக வேண்டாம்

10. முன் பின் தெரியாத நாலு பேர்களுடன் பேசிப் பழகி வேலை செய்வது என்பது தமிழர்களுக்கு பாகக்காய் சாப்பிடும் விஷயம். கணினியத் தொழிலில் யார் கூடவும் பேசிப் பழகவேண்டிய அவசியமில்லை. தானுண்டு தன் கணினி உண்டுன்னு தனியாக உழைக்க முடியும்.

ஆகவே, கணினியம் இயல்பாகவே தமிழர்களுக்கு வருகிறது. அது கடவுளால் அவர்களுக்கு அளிக்கப்பட்ட வரப்பிரசாதம்தான். ஆண்டவன் ஒவ்வொரு மொழியினர்க்கும் ஒரு இயல்புகளை உள்ளிருத்தி படைக்கிறான். அதுவுமில்லாமல் அவர்கள் தழைக்க அவர்களுக்கேற்ற சில தொழில்களையும் படைத்துள்ளான். கணினியம் தமிழர்களுக்காக உருவாக்கப்பட்ட தொழில் பிரிவோ?

ஆனால் கணினியம் அறிவு பெற்றிருந்தாலும் அதை வைத்து தானாகவே பணம் பண்ண தமிழர்களுக்கு இன்னும் தெரியவில்லை. அதை எப்படி விற்று பணம் பண்ணுவது என்பது அவர்களுக்கு தெரியவில்லை. ஏன்னா எதையும் பணம் பண்ணும் அறிவாக அவர்கள் நினைத்து, செய்து பழக்கமில்லை.சுயமாகத் தொழிலில் முனைப்பு கொள்வது என்ற எண்ணம் மனதில் உதிப்பதே இல்லை.

“பாடி சாப்பிங்க்” னு கேள்வி பட்டிருப்பிங்க. அதாவது கணினியம் தெரிந்த ஆசாமிகளை பண்டப்பொருளாகப் பயன்படுத்தி பல இடைத்தரகர்கள் பணப் பலன் பெறுகிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாம் தமிழர்கள் அல்ல.அதுக்கு மார்க்கெட்டிங்க் தெரியுணும். நாலு பேரிடம் பேசி எதெதுக்கு மார்க்கெட் இருக்கு என்று அலசல் பண்ணும் திறமை இருக்க வேண்டும். அதில் தமிழர்கள் கொஞ்சம் பலகீனமானவர்கள்தான்.

அதே மாதிரி தமிழர்களுக்கு தெரிவு சேகரிக்கும் திறமையில்லை. தெரிவுகளை யாராவது சேகரித்து கொடுத்தால் அவர்களுக்கு அதை விதவிதமாகக் கூறுபோட்டு காண்பிக்கும் திறமையுண்டு. சேகரிக்கும் திறமை இருந்தால் தானே தெரிவை விற்கமுடியும்.

பல புரோகிராமர்களை இணைத்து அவர்களிடமிருந்து வேலை வாங்கி ஒரு பெரிய நிறுவனத்தை நடத்தும் திறமையும் அவர்களிடமில்லை. ஏன்னா தானாகச் செயல்படத்தான் தெரியும். மற்றவர்களிடம் வேலையை பகிர்ந்துகொள்வதோ, மற்றவர்களி¢டம் வேலையை கொடுத்துவிட்டு அதன் வளர்ச்சியை கண்காணிக்கும் திறமையும் இயல்பாகத் தமிழர்களிடம் இல்லை.

புதுப்புது வழிகளில் கணினிய அறிவை பயன்படுத்தி ரிஸ்க் எடுத்து தொழில் துவங்க தமிழர்கள் தைரியத்துடன் செயல் பண்ணவேண்டும். எப்போதுமே ஒரு பாதுகாப்பான வேலையையே தேடித்தேடிப் பழக்கமடைந்துள்ளார்கள்.

கணினியல் அறிவை பெற்று அதை விற்று பணம் பண்ணும் யுக்தியை தமிழர்கள் பெற்றார்களானால் இத்தொழில் மூலம் அவர்கள் முன்னேற பெரும் வாய்ப்பு உள்ளது. இது பற்றி தமிழர்கள் சிந்திக்க வேண்டும். வருங்காலத் தமிழ் கணினியத் தொழிலாளர்களை அவ்வழியில் செல்ல வழிகாட்ட வேண்டும்.

No comments: