Monday, June 06, 2005

மாணாக்கர்கள் தற்கொலை, வரதட்சணை பரவுதல், வளருதல்

இந்தியாவிலும் தமிழகத்திலும்
எல்லோரும் நம்புவது,விரும்புவது
தங்களது குழந்தை
டாக்டர்
இஞ்சினீர் (அதுவும் கணினி சம்பந்தமானப் பிரிவுகள்தான்)
சாப்ட்வேர்
என்கிற மூன்று துறைகளில் வேலை செய்தால்தான்
மூன்று வேளை சாப்பிடவும் மற்றும் நிரந்தரமான வேலை செய்வதற்கும்
முடியும் என்பது.

ஆனால் கிட்டதட்ட 3% குழந்தைகளால்தான் இந்தத் துறைகளில்
படிப்பும் பயிற்சியும் எடுக்கமுடிகிறது. 97% குழந்தைகளுக்கு அது சாத்தியம் இல்லை.

ஆகவே எல்லோரும் தங்கள் குழந்தைகளை இந்த மூன்று துறைகளில் தான்
படிக்கவைக்க விரும்புகிறார்கள். மற்ற எந்த துறையும் உபயோகமில்லாதது என்று நம்புகிறார்கள்.

இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் தேவையானது

தண்ணீர் மேளான்மை, தண்ணீர் சேர்த்தல், தரையடி தண்ணீர் மேளான்மை.

ஆனால் இந்தமாதிரித் துறைகளில் யாரும் படிப்பதில்லை.

30 , 40 வருடங்களுக்கு முன் இப்போதுள்ள மாதிரி எல்லா தர மக்களூம்
தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பியதில்லை
ஆகவே இப்பொது காம்படிஷன் ரொம்ப ரொம்ப ஜாஸ்தியாகிவிட்டது
பார்வர்ட், பாக்வார்ட், மோஸ்ட் பேக்வரட், செட்யூல்ட்காஸ்ட்

எல்லா மாணவர்களும்
இப்போது சகஜமாக 90% மேல் மார்க் வாங்குகிறார்கள்
என்னை கேட்டால் 90% மேல் மார்க் வாங்கினால் 90 என்றால் என்ன 99 என்றால் என்ன?

அவர்கள் எல்லாம் நல்லா படிக்கும் குழந்தைகள்தான்
ஆனால் இவ்வளவு குழந்தைகள் இருக்கையில் சிலரைதான் தேர்ந்தெடுக்கமுடிகிறது.

ஆகவே எல்லோரும் 95% மார்க் மேல் வாங்க முயற்சிக்கிறார்கள்
ஆனால் 91% வாங்கினால் அம்பேல்தான்
தற்காலப் பெற்றோர்கள் மழைப்பள்ளியில் இருக்கையிலேயே தங்கள் குழந்தைகளை
இந்த துறைகளுக்கு தான் படிக்கச் சொல்கிறார்கள். அவர்களது மூளை
எல்லாம் இதே எண்ணத்தில் சலவை செய்யப்படுகிறது.

உலகத்திலேயே இந்தியா (தமிழகம்)வில் தான் எல்லா மழலைப் பள்ளி
குழந்தைகளும் "நான் பெரியவனானவுடன் (பெரியவாளனவுடன்) டாக்டர் ஆக விரும்புகிறேன்"என்று கோரஸ் போடுவார்கள்.

மற்ற நாடுகளில் பல துறைகளில் வேலை செய்தால்
நல்ல சம்பாத்தியம் பெறமுடியும். ஆகவே
வெளிநாட்டிலுள்ள பல டாப் ரேன்கிங்க் குழந்தைகள் (மேல்நிலைப் பள்ளி மாணவர்கள்)
தங்களுக்கு விருப்பமான
துறையில் தான் வேலை செய்யவிரும்புகிறார்கள்.

தமிழகத்தில் தங்களது குழந்தை 95% வாங்காமல் 91% மார்க்மாத்திரம் வாங்கினால்
அவன் உபயோகமில்லாதவன் என்று சொல்லாமல் உணரவைத்து
தங்களது குழந்தையை தற்கொலை செய்ய தமிழகப் பெற்றோர்கள் தூண்டுகிறார்கள்.

பெண்களைப் பெற்ற எல்ல பெற்றோர்களும் தங்களது
மகள்களை இந்த மூன்று துறை வரண்களுக்கே கொடுக்க விரும்புவதால்
வரதட்சணை விலை ஏறி வருகிறது.

இதற்கெல்லாம் தீர்வு மற்ற நாடுகளிலுள்ள மாதிரி பெரும்பாலான வேலை
செய்தால் சாதாரணமான (வாழ்க்கைக்குத் தேவையான) சம்பாத்தியம்
பெறவைக்கும் பொருளாதார வளர்ச்சி தான்.

அது நடக்க பலவருடங்களாகும்
அது நடக்கும் வரை இம்மாதிரி தற்கொலை வரதட்சணைப் பிரச்சனைகளை எதிர்கொள்ளவேண்டியதுதான்.
இண்டி ராம்

No comments: