Friday, June 03, 2005

அமெரிக்காவைவிட இந்தியாவில் வாய்ப்புகள் அதிகமாம்!

http://news.bbc.co.uk/2/hi/business/4603765.stm

சமீபத்தில் பிபிசி தளத்தில் வெளிவந்த
திடுக்கிடவைக்கும் செய்தியைப் பற்றி
என் எண்ணங்கள்

நமது மனக் கண்களை திறக்கவைக்கும்,
சிந்தனையை தூண்டவைக்கும் செய்திதான்
எனது உறவினரின் பையன் இந்தியாவில் பள்ளி இறுதி முடித்து
பொறியியல் கல்லூரி படிக்க ஆரம்பித்திலிருந்தே அமெரிக்கா போய்
மேற்படிப்பு படித்து அங்கேயே தான் வாழவேண்டும்
என்று ஒத்தக்காலில் நின்று பைத்தியமாக இருந்து வருகிறான்
தற்சமயத்தில் அமெரிக்காவில் மேற்படிப்பு படிக்கையில்
முன்பிருந்தமாதிரி டிஏ ஆர் ஏ ஸ்காலர்ஷிப் டுயூஷன் வெய்வர் எல்லாம்
மாஸ்டர்ஸ் பையனகளுக்கு கொடுப்பதில்லை.
ஆகவே அமெரிக்காவில் மேற்படிப்பு படிக்க விரும்புகிறவர்கள்
தங்களது சுய பொருளாதார வசதியை நம்பிதான்
மேற்படிப்பு படிக்கவேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.
எல்லா சிலிகான் வேலி கம்பெனிகள் எல்லாம்
இந்தியாவிலேயே கிளைகள் ஆரம்பித்து
அங்குள்ளவர்களையே வேலைக்கமைத்து வேலையை நடத்துகின்றனர்
ஆகவே பொறியியலாளர்களுக்கு (ஐடி சம்பந்தமான வர்களுக்கு)
அமெரிக்காவில் வேலை வாய்ப்பு அரிதாகி வருகிறது.
அப்படியே கிடைத்தாலும் நிறுவனத்தார் நிரந்தர விசா ஸ்பான்ஸார் பண்ண மறுக்கிறார்கள்
இந்த விஷயம் தமிழ் நாட்டு மாணாக்கர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் பரவலாக
தெரியுமா என்பது எனக்குத் தெரியாது.
மேலும் இதைப் பற்றி தமிழ் பேப்பர்கள்
எழுதுகின்றனவா? பழங்கால நினைவுகளையே நம்பாமல்
தற்கால, வருங்கால நிலமையை ஊகித்து நமது வேலை வழிப்போக்கை (கேரியர்)
நடத்திக்கொள்ளவேண்டும்
இண்டி ராம்

No comments: