Friday, May 02, 2008

Spelling mistakes in Tamil/English writings

Spelling words correctly in Tamil and in English writings

Most of us don't read Tamil writings (newspapaers, magazines, Web articles,
blogs) on a regular basis.

It is interesting to note that most of the middle class families in TN
subscribe to only English newspapers.

IN TN there is also the feeling that if you read a Tamil daily, you are
considered not college educated.

Most of the college-educated folks can write or speak on many topics in
English than in Tamil.

Other than having written some letters to their parents in Tamil, most of
them

don't have much experience in writing something on their own (their
opinions, thoughts

feelings or arguments) in Tamil.

(This doesn't apply to those who are good writers in Tamil as well as in
English)

IN my opinion those who can write several page articles in Tamil are a
minority among

Tamil speakers. I maybe wrong but I doubt it..

For the occasional writers of Tamil the issue of spelling of the word can be
problematic

For example in Tamil we have the issue with ன், ண்,ர்,ற்,ல்,ள்

We don't have a simple clean cut word for spelling எழுத்துக் கோர்வை,
எழுத்துக்கோவை

எழுத்துக்கூட்டு, சொல்லியெழுதல்

Can we use the word spell as a verb?

no ..

how do you spell the word? (say it in Tamil?)

We say it in a round about manner

இந்த வார்த்தையின் எழுத்துக்கோர்வை எப்படின்னு சொல்லுங்க

ஒரு சின்ன குழந்தையிடம்

it is easy to ask "how do you spell the word lion?"

Try that in Tamil

ஏன் பையா சிங்கம் என்கிற வார்த்தையின் எழுத்துக்கோர்வையை சொல்லு பார்ப்போம்?

I don't recall I ever having had oral discussion of Tamil spelling in a
class

it was always கோடிட்ட இடத்தை நிரப்பு

However most of us are comfortable with our spellings in English

Yes English spelling is tough similar to that of Tamil

Take for example

budget...budjet
education---educashion, ejucation
College...collage ( yes there is another word)
recently...resently
congratulation..congradualtion, congrajulation
buttock..buttux, buttack

It too can drive us crazy

but for the most part we overcome it by practice

How?

Our eyes get used to seeing the correct spelling while we read English
writings.

So we make it a point to spell it correctly

It is also considered a mark of poor education if you make mistakes in your

spelling in English

More importantly

We have nice spellcheckers in English

These checkers are well integrated with MS Word and MS outlook or outlook
express emails

and I believe some of the Web email clients also offer the spellchecking

TN is supposed to have super duper programmers

Unfortunately I have not seen any spellcheckers that integrate nicely with
MS Word, Outlook or Outlook express

Kural has a spellchecker but you have to do cut and paste and back again

It is not easy to input all the Tamil words

We have the issue of சந்தி

Every word has to have different சந்தி permutations

for example

we have தமிழ்(க்) காப்பாளன், தமிழ்ப் பிரியன் தமிழ்ச் செல்வன்

In addition to the word Tamil we have to have all the சந்திசேர்த்த தமிழ் as
a word

That will certainly make the dictionary file bloated. We can even claim to
have more words

in our dictionary file than any other language in the world!

Most of the standard Tamil- English dictionaries have only about 30,000
unique Tamil words

In the case of English-Tamil dictionaries they may have as many words as
English words

They will just define or cook up multiword equivalents for any English word
and call it an equivalent Tamil expression

On top of all this we have the problem created by the usage of phonetic
Tamil keyboard usage like ( Murasu Anjal)

Here you use the same letter n or shifted n or l or shifted l or r or
shifted r

to produce the letters ன்,ண்,ல்,ள்,ர்,ற்

typos are easily created by pressing the wrong letters in the wrong places

Most of us don't want to invest money to buy a current Tamil-English
dictionary ( like Kiriya's)

We feel that it is our mother tongue and so we should not have to use it

Also, strangely we don't feel so bad when we make spelling mistake in Tamil

as we do when we do so when we write in English ( I wonder why it is so)

Perhaps we may have the feeling

See here I have bothered to write more than 3 lines in Tamil

That itself is an accomplishment. So the readers need to excuse or overlook
my spelling mistakes...

So many dilemmas and thoughts when we think

about spelling mistakes in our Tamil /English writing and our attitude
toward it

( I am going to run my spellchecker before I send this out)

I hope I haven't offended anyone's sentiments by having expressed my
dilemmas about this topic

Indy Ram

Thursday, January 24, 2008

தற்காலத்திற்குகந்த திருக்குறள் பாடல்களை மட்டும் மனனம் செய்யலாமே

பேங்க் வேலையிலிருந்து ரிடயர்ட் ஆன ஒருவரை சமீபத்தில்
சந்தித்தேன். சும்மா பேசிகிட்டு இருக்கையில் "என்ன பண்றதாக இருக்கிறீங்க"
ன்னு கேட்டேன். ஏதாவது சமூகத் தொண்டு செய்யப்போகிறீங்களான்னு கேட்டேன்
அவர் சொன்னார் "இல்லீங்க திருக்குறளுக்கு ஒரு தெளிவுரை
எழுதலான்னு இருக்கேன்னார்"
மாறிவரும் இந்த காலத்தில் ஒரு தமிழன்னு அல்லது தமிழர் என்று
கூறிக்கொள்வதற்கு என்னென்ன அடையாளங்கள் இருக்குதுன்னு யோசிச்சு பார்த்திருக்கீங்களா
தமிழ் னு அந்த ழ பிழையில்லாமல் எழுதத் தெரியுனும்
அதை எப்படி வேண்டுமானாலும் உச்சரிக்கலாம்
இட்லி, தோசை சாம்பாரை விரும்பி சாப்பிடனும்
மேலும் திருக்குறள்னா என்ன என்பதை தெரிஞ்சு வச்சுக்கனும் அவ்வளவுதான்
மத்தபடி தமிழில் சரளமாகப் பேசவேண்டியதில்லை, படிக்கவேண்டியதில்லை
எழுதத் தெரியவேண்டியதில்லை. தற்கால மெட்ரிகுலேஷன் மாணவர்களை
கருத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
ஆம் தமிழர் என்று சொல்லிக்கொள்வதற்கு திருக்குறள், வள்ளுவன் இதெல்லாம் தெரியணும்
ரிடயர்ட் ஆன பேங்க் ஆபிசர், அரசு அதிகாரிகள், ஜட்ஜ்கள் எல்லோரும்
திருக்குறளுக்கு ஒரு விளக்கவுரை, தெளிவுரை அல்லது பதவுரையை
எழுதி அதை ஒரு புத்தகமாகத் தயாரித்து தமது நண்பர்களுக்கும்
உறவினர்களுக்கும் கொடுத்து மகிழவேண்டும் என விழைகிறார்கள்
அது வரவேற்கத் தக்கதுதான்
எனது நண்பருக்கு நான் ஒரு ஆலோசனை கொடுத்தேன்
என்ன அது?
ஆமாம் பலபேர் இந்த காரியத்தை செய்துள்ளார்கள் (பரிமேலழகரிலிருந்து)
நீங்க ஒரு புதுசான காரியத்தை செய்யுங்களேன் என்றேன்
என்னன்னு கேட்டார்
இந்த 1330 குறள்களில் பல வானத்தை பற்றியும், மழையைப் பற்றியும், பூமி
யைப் பற்றியும் இன்னும் பல தற்காலவாழ்க்கைக்கு உதவாதவைதான் உள்ளன
(தயவு செய்து உடனேயே கடுப்படையாதீர்)
இந்த 1330 களை நல்லா வடிகட்டி இந்த காலத்திலும் நம்ம குழந்தைகளுக்கு
சுட்டிகாட்டக்கூடியவைகளை தேர்ந்தெடுத்து (எத்தனை இருக்குமோ எனக்குத் தெரியாது)
(உதாரணமாக
கற்க கசடற கற்ற பின்
நிற்க அதற்குத் தக. (Learn your subjects well and then make use of that knowledge to solve problems)
அவைகளுக்கு மாத்திரம் பதவுரை எழுதுங்களேன்னு சொன்னேன். அதைப் பலர்
விரும்புவர் என்று சொன்னேன்
அவர் சொன்னார் "அதெல்லாம் நல்லா இருக்காதுங்க"
பிறகு நான் சொன்னேன் "நீங்க உங்களுக்கு விருப்பமான விதத்திலேயே செய்யுங்கள்
, உங்கள் முயற்சி நிறைவேற எமது வாழ்த்துக்கள்" னு சொல்லி விடைபெற்றேன்
என் சிற்றறிவுக்கு 1330 ல் பாதிக்கு மேல் இந்த காலத்தில் அன்றாட வாழ்க்கைக்கு
பிறருக்கு சொல்லி பயன்படுத்த முடியாதுன்னு நான் நினைக்கிறேன்.
முக்கியமான சில குறள்களை மனனம் செய்து அன்றாட வாழ்க்கையில்
பயன்படுத்தலாம்.
நீங்க என்ன நினைக்கிறீங்க
நல்லா ஆழ்ந்து யோசித்து பதில் அளிக்கக் கேட்டுக்கொள்கிறேன்

Monday, January 14, 2008

தற்காலத் தமிழ்ச் சான்றோர்கள் பட்டியல்

ஒரு காலத்தில் கட்சி சார்பற்ற தமிழ் பேசுபவர்களால் பெரிதும்

மதிக்கப்பட்டோர்களின் பட்டியலில் இருந்தவர்கள்

1. மறைமலை அடிகள்
2.குன்றக்குடி அடிகளார்
3. கி ஆ பே விஸ்வநாதன்
4. பி டி ராஜன்
5. கல்கி

தற்காலத்தில் தமிழ் பேசுபவர்களால் பெரிதும் மதிக்கப்படும்

கட்சி சார்பற்ற தமிழ்ப் பெரியவர்கள் யார் யார்

என்று தமிழக நண்பர்கள் தெரிவித்தால்


அது மிகப் பயனுள்ளதாக இருக்கும்.

1. குழந்தைசாமி

2. சுகி செல்வம்

3. சைமன் பாப்பையா

அறிந்தோர் இன்னும் இப் பட்டியலை வளரவைக்கவும்

இண்டி ராம்

Tuesday, January 08, 2008

ரட்டன் டாட்டாவுக்கு எமது வணக்கங்கள்

வரும் வியாழக்கிழமையன்று
டாட்ட நிறுவனத்தார் தமது ஒரு லட்ச ரூபாய் காரை
வெளியிடப்போகிறார்களாம்
இது மகத்தான சாதனைதான்
சமீபகாலங்களில் இந்தியர்கள் தமிழர்கள்
பில்கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ், லேரி எல்லிசன்
போன்றோர் மாதிரி பல கோடி மக்களுக்கு பயனளிக்கும்
பிரசித்திமிக்க சாமான்களையோ, மென்பொருளையோ, சேவையையோ வெளிப்படுத்தியுள்ளார்களா?
அறிந்தவர்கள் தெரிவிக்கவும்
நாம் பிறர் தயாரித்துகொடுத்த மென்பொருட்களை சாமர்த்தியமாகப் பயன்படுத்து
வதில் வல்லவர்கள்தான் (இன்போசிஸ், விப்ரோ, சத்யம்).
டாட்டா நிறுவனத்தின் சாதனை பல கார் தயாரிப்பவர்களின் கவனத்தை
ஈர்த்துள்ளது. இதனால் ஏழைநாடுகளில் உள்ள பலர் பலனடைவர் என்று கருதப்படுகிறது.
மேற்கத்திய நாட்டு கார் நிறுவனங்களும் குறைந்த விலையில்
எப்படி கார் தயாரிப்பது என்பதை நினைக்க ஊக்கம் அளித்துள்ளதாம்
ரட்டன் டாட்டா இந்தியாவுக்கு புகழ் சேர்க்கிறார்.
அவருக்கு எமது வணக்கம் தெரிவிக்கிறேன்.
இண்டி ராம்

இந்திய பெரிய மனிதர்களில் ஒருவர் காலமானார்

இன்றைய நியூ யார்க் டைம்ஸில் மறைவு அறிக்கை (is there a better translation

for obituary) பகுதியில் மருத்துவர் பி. டி சேதியின் மறைவைப் ( கடந்த ஞாயிறு )

பற்றி தகவல் தந்துள்ளார்கள் . இவர் "ஜெய்பூர் ஷூ" என்கிற செயற்கை காலை

தயாரித்து பல விருதுகளைப் பெற்றவர். உலகத்திலேயே மிகுந்த பயனளிக்கும்

குறைவான விலையில் செயற்கை "கால்" ஐ தயாரித்த பெருமை இவருக்குறித்ததாகும்

நியூ யார்க் டைம்ஸில் சாதாரணமாக மிகப் பிரபலமடைந்த

வெளிநாட்டினரின் மறைவைத் தான் பிரசுரிக்கிறார்கள்

இவரின் செயற்கை கால்கள் ஆசியா ஆபிரிக்கா அஃப்கானிஸ்தான், தென் அமெரிக்கா

ஆகிய இடங்களில் வசிப்பவர்களால் பெரிதும் உபயோகிக்கப்பட்டு வருகிறது

கிட்டதட்ட 10 மில்லியன் காலிழந்தவர்களால் இந்த செயற்கை கால்

பயனிக்கப் படுகிறதாம்

இவரது சாகசம் இந்தியாவுக்கே நற்பெயர் கொடுத்துள்ளது

இந்த நல்ல மகாத்மாவின் உயிர் இறைவனடைய பிரார்திக்கிறேன்..

இண்டி ராம்

தகவ்லுக்கு இங்கு செல்லவும்

http://seattlepi.nwsource.com/national/1104ap_obit_sethi.html

Saturday, January 05, 2008

தலையை நிமிர்த்திக்கொள்வதா தாழ்த்திக்கொள்வதா?

வெளிநாடுகளில் இருக்கையில் மற்றொரு தமிழரோ அல்லது
இந்திய வம்சாவளியினரோ நல்லதை செய்தால்
அந்த நபர் நமக்குத் தெரிந்தவராக இருந்தாலும், இல்லாவிட்டாலும்
நம் உள்ளத்தில் ஒரு திருப்திகரமான உணர்வு எழும்புகிறது.
ஆனால் அதே நபர் ஒரு சமூகத் துரோகமான செயலையோ
அல்லது அறுவருக்கத்தக்க செயலை செய்தாலோ நமது மனம்
கசப்படைகிறது. அவமானமடைகிறோம்.
போன வாரம் இம்மாதிரி இரண்டு செய்திகள் ஒரே சமயத்தில் வெளிவந்தன
இரண்டும் அமெரிக்காவில் பிரபலமான செய்தித்தாளான நியூயார்க் டைம்ஸில்
தான் வெளிவந்தன
நற்செய்தி
ஜப்பானில் இந்தியர்களால் நடத்தப்படும் ஆரம்பப்பள்ளிகளில்
கல்வி பயிலும் சிறு குழந்தைகள் மிக நன்றாகப் படிக்கிறார்கள்களாம்
அறிவுத்திறமை காட்டுகிறார்களாம்.
அங்கு இந்தியக்குழந்தைகளைவிட ஜப்பானியக் குழந்தைகள்
தான் அதிகமாக சேரவிரும்புகின்றனராம்.
ஜப்பானியர்கள், இந்திய தகவல் தொழிநுட்பத்திறனைக் கண்டு
மலைப்படைகிறார்களாம் . எப்படி இந்தியர்கள் இந்தத் துறையில் முன்னேறிவிட்டார்கள்
என்று புரியாமால் குழப்பமடைகிறார்களாம்.
( எனது புரிதலை எனது முன்பொரு மடலில் தங்களுக்கு சுட்டிக்காட்டியிருந்தேன்)
இரண்டாவது செய்தி
கொடூரமானதுதான்....
ஒரு 57 வயதான சிக்காகோ வாழ் இந்திய வம்சாவளியினர் தனது
22 வயதான மகள் மேலோ அல்லது அவளது கணவன் மேலோ
ஏதோ காரணத்தால் கோபம் கொண்டு வழக்கம் போல்
(இந்தியாவில் சிலர் செய்வதுபோல்) நடு நிசியில் தன் கர்ப்பமடைந்த
பெண்ணின் அபார்ட்மெண்டுக்குள் பெட்ரோல் ஊத்தி நெருப்பு வைத்து
தனது மகளையும் மருமகனையும், 3 வய்து பேரனையும் கொன்று தீர்த்துவிட்டார்
அபார்ட்மெண்ட் எரிந்தபோது அவர் 911 கூப்பிடவில்லை
ஒன்றுமே நடக்காதது போல 500 அடிகள் தாண்டி தன் வீட்டிற்கு சென்று விட்டார்.
அந்த அபார்ட்மெண்ட் காம்ளக்ஸில் தனது மகளைத் தவிர 70 பேர் வாழ்ந்து
வந்தனர். அவர்கள் எல்லோரும் எப்படியோ சிறுகாயமடைந்து உயிர் தப்பினார்
36 அபார்ட்மெண்ட்கள் எரிந்து நாசமாகின
அமெரிக்காவில் வன்முறைச் செயலைச் செய்பவர்கள் உள்ளனர்
ஆனால் இது மாதிரி ஒரு வயது முதிர்ந்த ஆள் தானே பெற்ற
"கர்ப்பமடைந்த" மகளையும் "3 வயது பேரனையும்" சுட்டுக்கொல்லும்
கொடூர மனதை கொண்டுள்ளவர்களைப் பார்ப்பது அல்லது கேட்பது
அரிதுதான்.
ஆனால் இம்மாதிரிச் செயல்கள் அவ்வப்போது இந்திய செய்தித் தாள்களில்
இப்போதும் படித்தறியலாம்.
(விவாகரத்து, வரதசட்சணை ஜாதி மதக் கலப்பான திருமணங்கள்
பங்காளிச் சண்டை , மனைவிமேல் சந்தேகம் சம்பந்தமான விஷயங்கள்)
பாவம் , தீவினைப் பலன் ஆகியவற்றில் நம்பிக்கை இழந்துவிட்டோமோ?
இண்டி ராம்

Thursday, January 03, 2008

இந்தியர்களின் தகவல் தொழில் நுட்ப சூட்சமத்தின் காரணங்கள் என்னென்ன

தகவல் தொழில்நுட்பத்தில் இந்தியர்கள்

குறிப்பாக தென் இந்தியர்கள்

சப்பானியர்களை விட சாமர்த்தியமாகிவிட்டார்களே

எப்படி?. அது அவர்கள் கல்விகற்கும் விதாமா

என்று சப்பானியரகள் குழம்பி வருகிறார்கள்.

அதைப் பற்றி ஜனவரி 2 ம்தேதி நியூ யார்க டைம்ஸில் ஒரு கட்டுரை

வெளிவந்தது.

அதற்கு காரணம் அவர்களது உயர்தர கல்வி கற்கும் அல்லது

கற்பிக்கும் முறையல்ல கணினியம் தென் இந்திய மனப்போக்குக்கு

மிகுந்த இயல்பான, பொருத்தமான துறை என்பது

பலருக்கு புரியாது

பாம்பின்கால் பாம்புக்குதான் தெரியுமல்லவா

இதோ என் புரிதாலை தங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்

----------------------------------------------------------------------------------------------------------

இது சில வருடங்களுக்கு முன்பு அமீரக தமிழ் இணைய நண்பர்கள்ஆண்டுவிழா ஒட்டிய

சிறப்பு வெளியீட்டில் வெளிவந்தது (2004)

------------------------------------------------------------------------------------------


கணினியமும் தென்னிந்தியர்களும்

(இண்டி ராம்)

கணினியம் என்றால் என்ன என்பதை நான் முதலில் தெளிவுறுத்த விரும்புகிறேன். கணினியத்தை ஆங்கிலத்தில் computing என்று சொல்கிறார்கள். கணினியம் என்றால் கணினி, (computer) இணையம் , (Internet) தகவல் தொழில்நுட்பம்(Information technology) ஆகிய அனைத்து அறிவுகளையும் உட்கொண்டது எனலாம். நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், கணினியத்துக்கும் தென்னிந்தியர்களுக்கும் (குறிப்பாகத் தமிழர்களுக்கும்) இயல்பாகவே ஓர் இணைப்புள்ளது. மீன்குட்டிக்கு நீந்தக் கற்றுக் கொடுக்கவேண்டிய அவசியமில்லை. அதேபோல் தமிழர்களுக்கு கணினியம் பற்றி சொல்லித்தரவேண்டிய அவசியமில்லை என்பது என் கருத்து. எந்தத் துறையில் தொழில் புரிந்தாலும் தமிழர்களுக்கு (அடியேன் உட்பட) கணினியத்தின் மேல் ஓர் அலாதிப் பிரியம் உள்ளது என்பது வெளிப்படையான விஷயம். கணினியத்தை அவர்களால் எளிதில் கற்றுக்கொள்ள முடிகிறது. இதைப் பற்றி நான் பல காலமாகச் சிந்தித்து வருகிறேன். சில சமயம் நான் கணினியம் தமிழர்களுக்கு அளிக்கப்பட்ட வரப்பிரசாதமாகக் கூட நினைப்பது உண்டு. கணினியத்துக்கும் தமிழர்களுக்கும் உள்ள ஈர்ப்புக்கான காரணங்கள் என்னென்ன என்பதைப் பற்றி இக்கட்டுரையில் அலச விரும்புகிறேன்.

கணினியம் மூளை சம்பந்தமான விஷயம்

1. தமிழர்களுக்கு மூளையைப் பயன்படுத்தி செய்கிற காரியங்கள் பிடித்தமானவை. உடம்பை வறுத்தி செய்யும் காரியங்கள் பிடிக்காதவை. இதனால்தனோ என்னவோ பெரும்பாலானத் தமிழர்களுக்கு கைசுத்தமாக வேலை செய்யத்தெரியாது. கணினியம் முளை சம்பந்தமான விஷயமாதலால் அது அவர்களுக்கு அல்வா துண்டுமாதிரி.

தர்க்க உணர்வு

2. தமிழர்களுக்கு தர்க்க உணர்வு (logical sense) இயல்பாகவே உண்டு. a+b=c என்றால் c-b=a என்பது அவர்களுக்கு சொல்லாமலேயே தெரியும். கணினியத்தில் புரண்டு விளையாட உயரிய கணித அறிவு அவ்வளவு தெரிய வேண்டியதில்லை. ஆனால், தர்க்க உணர்வு கட்டாயம் தேவை. அது இருந்தால் தான் தெரிவு தளத்தின் நுட்பத்தை உணர்ந்து செயல்பட முடியும்.

தனிப்பட்ட முறையில் வேலை செய்பவர்கள்

3. தமிழர்களுக்கு ஒன்று சேர்ந்து வேலை செய்து பழக்கமில்லை. இது சாதிக் கேட்டின் விளைவு என்றும் சொல்லலாம். ஒன்றாக இணைந்து சேர்ந்து ஒரு குறிக்கோளை சாதிக்கமாட்டார்கள். ஆனால் அவர்களைத் தானாக செயல்பட் விட்டால் திறமையாகச் செய்து காட்டுவார்கள். கணினிய வேலைகள் ஒவ்வொருவராலும் தானாகச் செயல்படுவதால் அது அவர்களுக்கு பிடித்தமான தொழில்.

செக்கு மாடு மாதிரி உழைக்கத் தயங்குவதில்லை

4. தமிழர்கள் சுவாரசியமில்லாத , நெடுநேரமெடுக்கும் வேலைகளைச் செய்யத் தயங்குவதில்லை. அதனால்தான் வெள்ளைக்காரன்கள் தமிழர்களை அவர்களுக்குத் தேவையான கிளார்க் பட்டாளமாக்கினார்கள். y2k மாதிரி தமிழர்கள் டைப்படிப்பதிலும், ஸ்டெனோ வேலை செய்வதிலும் ஆர்வமுள்ளவர்கள். புரோகிராம் எழுதுவது கொஞ்சம் சுவாரசியமில்லாத வேலைதான். ஆனால் சம்பாத்தியம் கிடைக்குதே என்று சமாதானப்படுத்தி வேலை செய்ய தமிழர்கள் தயங்குவதில்லை. மேலைநாட்டவர்களுக்கு எவ்வளவுதான் பணம் கொடுத்தாலும் y2k மாதிரியான வேலையை செய்ய விரும்ப மாட்டார்கள்.

குளுகுளு ஏசி

5. தமிழர்களுக்கு குளுகுளு ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு அப்பப்ப டீக்குடிச்சு, அல்லது தம்மடிச்சு வேலை செய்வது என்பது பிடித்தமான கனவு வேலை (dream job) விஷயம்.பெரிய கணினிகள் எல்லாம் குளுகுளு ஏசி அறையில் தான் வைக்கப்பட்டிருக்கும். ஆகவே இந்தமாதிரி சூழலில் வேலை செய்வது தமிழர்களுக்கு கரும்பு தின்பது மாதிரி தான்.

தன்னறிவு இன்றியமையாது

6. கணினியம் அறிவு ஒரு தொழிற்கூடத்தில் இன்றியமையாது. எனக்கு இது எப்படி பண்றது அது எப்படி பண்றது என்று சிலர் தெரியாமால் கணினியம் தெரிந்தவர்களை நாடிச் செலவார்கள். இது மாதிரி சிலருக்குத் தெரியாத கணினியல் அறிவை தான் பறை சாற்றுவது மனசுக்குள் திருப்தி யளிக்கும் செயல். ஆகவே கணினியம் எக்ஸ்பர்ட் என்பது அவர்களுக்கு பிடித்தமானது.

தானே கற்றறியும் திறமை

7. கணினியத்தில் பெரிய பெரிய செய்முறைப் புத்தகங்களைப் படித்து அதை கிரகித்து அதன் படி செய்யவேண்டிய கட்டாயம் உள்ளது. அதற்கு நுணுக்கமாகப் படிக்கும் திறமையும், இமாலயப் பொறுமையும் வேண்டும். அது இயல்பாகவே தமிழர்களுக்கு உண்டு.

தப்பு செய்து அறிவது

8. கணினியத்தில் அடிக்கடி தப்பு செய்து தான் நுணுக்கமாக வேலை செய்ய கற்றுக்கொள்ளவேண்டும். இம்மாதி கற்பதற்கு ரொம்ப பொறுமை வேண்டும். விடாப்பிடியா உட்கார்ந்து , மணிக்கணக்காக கணினி முன்னால் தவமிருக்கவேண்டும். இதில் தமிழர்கள் மாதிரி யாரும் இருக்கமுடியாது.

நல்லா டிரெஸ் பண்ணவேண்டாம்

9. கணினியத்தில் வேலை செய்பவர்கள் எல்லாம் தோற்றத்தை பற்றி கவலைப்படுவதில்லை. நல்ல தோற்றமுடன் இருக்க பணம் செலவு செய்யவேண்டும். அது தமிழர்களுக்கு வேண்டாத செலவாகத் தோன்றும். ஆகவே, நல்லா டிரெஸ் பண்ணாம போகக் கூடிய வேலையான கணினியம் தொழில் அவர்களுக்கு பிடித்தமான விஷயம்.

நாலு பேரோட பேசிப் பழக வேண்டாம்

10. முன் பின் தெரியாத நாலு பேர்களுடன் பேசிப் பழகி வேலை செய்வது என்பது தமிழர்களுக்கு பாகக்காய் சாப்பிடும் விஷயம். கணினியத் தொழிலில் யார் கூடவும் பேசிப் பழகவேண்டிய அவசியமில்லை. தானுண்டு தன் கணினி உண்டுன்னு தனியாக உழைக்க முடியும்.

ஆகவே, கணினியம் இயல்பாகவே தமிழர்களுக்கு வருகிறது. அது கடவுளால் அவர்களுக்கு அளிக்கப்பட்ட வரப்பிரசாதம்தான். ஆண்டவன் ஒவ்வொரு மொழியினர்க்கும் ஒரு இயல்புகளை உள்ளிருத்தி படைக்கிறான். அதுவுமில்லாமல் அவர்கள் தழைக்க அவர்களுக்கேற்ற சில தொழில்களையும் படைத்துள்ளான். கணினியம் தமிழர்களுக்காக உருவாக்கப்பட்ட தொழில் பிரிவோ?

ஆனால் கணினியம் அறிவு பெற்றிருந்தாலும் அதை வைத்து தானாகவே பணம் பண்ண தமிழர்களுக்கு இன்னும் தெரியவில்லை. அதை எப்படி விற்று பணம் பண்ணுவது என்பது அவர்களுக்கு தெரியவில்லை. ஏன்னா எதையும் பணம் பண்ணும் அறிவாக அவர்கள் நினைத்து, செய்து பழக்கமில்லை.சுயமாகத் தொழிலில் முனைப்பு கொள்வது என்ற எண்ணம் மனதில் உதிப்பதே இல்லை.

“பாடி சாப்பிங்க்” னு கேள்வி பட்டிருப்பிங்க. அதாவது கணினியம் தெரிந்த ஆசாமிகளை பண்டப்பொருளாகப் பயன்படுத்தி பல இடைத்தரகர்கள் பணப் பலன் பெறுகிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாம் தமிழர்கள் அல்ல.அதுக்கு மார்க்கெட்டிங்க் தெரியுணும். நாலு பேரிடம் பேசி எதெதுக்கு மார்க்கெட் இருக்கு என்று அலசல் பண்ணும் திறமை இருக்க வேண்டும். அதில் தமிழர்கள் கொஞ்சம் பலகீனமானவர்கள்தான்.

அதே மாதிரி தமிழர்களுக்கு தெரிவு சேகரிக்கும் திறமையில்லை. தெரிவுகளை யாராவது சேகரித்து கொடுத்தால் அவர்களுக்கு அதை விதவிதமாகக் கூறுபோட்டு காண்பிக்கும் திறமையுண்டு. சேகரிக்கும் திறமை இருந்தால் தானே தெரிவை விற்கமுடியும்.

பல புரோகிராமர்களை இணைத்து அவர்களிடமிருந்து வேலை வாங்கி ஒரு பெரிய நிறுவனத்தை நடத்தும் திறமையும் அவர்களிடமில்லை. ஏன்னா தானாகச் செயல்படத்தான் தெரியும். மற்றவர்களிடம் வேலையை பகிர்ந்துகொள்வதோ, மற்றவர்களி¢டம் வேலையை கொடுத்துவிட்டு அதன் வளர்ச்சியை கண்காணிக்கும் திறமையும் இயல்பாகத் தமிழர்களிடம் இல்லை.

புதுப்புது வழிகளில் கணினிய அறிவை பயன்படுத்தி ரிஸ்க் எடுத்து தொழில் துவங்க தமிழர்கள் தைரியத்துடன் செயல் பண்ணவேண்டும். எப்போதுமே ஒரு பாதுகாப்பான வேலையையே தேடித்தேடிப் பழக்கமடைந்துள்ளார்கள்.

கணினியல் அறிவை பெற்று அதை விற்று பணம் பண்ணும் யுக்தியை தமிழர்கள் பெற்றார்களானால் இத்தொழில் மூலம் அவர்கள் முன்னேற பெரும் வாய்ப்பு உள்ளது. இது பற்றி தமிழர்கள் சிந்திக்க வேண்டும். வருங்காலத் தமிழ் கணினியத் தொழிலாளர்களை அவ்வழியில் செல்ல வழிகாட்ட வேண்டும்.

Monday, December 31, 2007

காயத்ரி மந்திரத்தைப் பற்றிய தவறான எண்ணங்களை கைவிடவேண்டும்

தமிழக பிராமணர்கள் அல்லாத இந்துக்கள்
காயத்ரி மந்திரத்தைப் பற்றிய தவறான எண்ணங்களை
கொண்டுள்ளார்கள்

என்ன அவைகள்

(1) பிராமணர்கள் அல்லாத மற்ற இந்துக்கள் அந்த மந்திரத்தை ஜபிக்கக்கூடாது

(2) மனசுக்குள்ளேயெ சொல்லிக் கொள்ளவேன்டும்

(3) காலை நேர்த்தில் தண்ணீர் தேக்கத்திலேயே அல்லது ஆற்றின் கரையிலேயே தான்

ஜபிக்கவேண்டும்

(4) அந்த மந்திரத்தை மற்றவர்கள் கேட்கும் அளவுக்கு பலமாக உச்சரித்தால் அதன்

மகிமை போய்விடும்

காயத்ரி மந்திரத்தின் அர்த்தம் என்ன

அதற்கு ஒவ்வொரு சமஸ்கிருத மொழிபெயர்ப்பாளரகளும், படித்தவரகளும்

ஒவ்வொன்று கூறுகின்றனார்

ஆகவே எது தான் சரியானது என்பது சர்ச்சைக்குரியதே

இருந்தாலும் எல்லா வியாக்கியானங்களிலும் பொதுவாக ஒரே கருத்துள்ளதே

சமஸ்கிருத மூலம்

ஓம் பூர் புவா ஸ்வா
தத் சவித்தூர் வேரேன்யம் பர்கோ
தேவஸ்ய தீமஹி
தியோய ன பிரசோயதாத் ஓம்

ஒரு தமிழாக்கம்

இம்மூவுலுகங்களை (பூமி, ஆகாயம், கீழ் (மேல்) உலகம்)
காப்பவனே (ளே) எல்லோராலும் போற்றப்படுபவேன (ளே)
சூரியனாகக் காட்சியளித்து உனது வெளிச்சம் என்னுள் புகுந்து
என் மனதையும் என்னுள் உள்ள உயிரையும் உன்னைப்பற்றி தியானிக்க
அருள்புரிவாயாக

இதை ஆழ்ந்து சிந்தித்தால் இந்துக்கள் அல்லாதோர்

கூட தினந்தோறும் சொல்லலாம்

(like the Christian's Lord's Prayer)

வடக்கத்திய எல்லா இந்துக் குழந்தைகளும் இந்த மந்திரத்தை சொல்லுகின்றனர்

அவர்கள் பஜணை செய்யும் "தூன்" களில் இந்த மந்திரம் முக்கியமானது

அவர்களது கல்யாணச் சடங்குகளில் இந்த மந்திரத்தை மூன்று தடவையாவது
சொல்கிறார்கள்

கீதா மண்டலில் பயிலும் எல்லா குழந்தைகளும்

( பிராமணர் பிராமணர் அல்லாதோர்) இந்த மந்திரத்தை

முதல் மந்திரமாக ஜபிக்கிறார்கள்

ஆகவே தமிழக எல்லா இந்துக்களும் இதை ஜபிப்பதைப் பற்றிய தவாறான எண்ணங்கள்

கொண்டுள்ளதை கைவிடவேண்டும்

இண்டி ராம்

Sunday, December 30, 2007

புதியன கற்கவேண்டும்

சற்றுமுன்னில் வெளிவந்த செய்தி

துபாய் சோனாப்பூர் தொழிலாளர் முகாம் அருகில்
எமிரேட்ஸ் சாலையை கடக்க முயன்ற இரண்டு
தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். இவர்கள்
பெரும்பாலும் இந்தியத் தொழிலாளர்களாகவே இருப்பர் என கருதப்படுகிறது.

-----------------------------------------------------------------------------------------------------------

சென்னையில் பல இடங்களில் மக்கள்
சாலையின் ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கத்திற்கு
போக பெடஸ்டிரியன் கிராசிங்க் (பாதசாரி கடக்குமிடம்) இடம்
ஒதுக்குவதில்லை. மக்கள் இரண்டுபக்கமும் பார்த்து
திடிர்னு உயிரையே கையில் பிடித்து கடக்கவேண்டும். வெளிநாடுகளில்
எல்லாம் இம்மாதிரி பாதசாரி கடக்கும் இடங்கள்
நல்ல படியாக குறிப்பிட்டிருப்பதால்
மக்களுக்கு அது நன்றாகப் பழகிவிட்டது
கார் ஓட்டிகளும் அந்த இடங்களில்
காரை நிறுத்தி மக்கள் சாலையை கடக்கும்வரை
பொறுமையாக உள்ளனர்.
மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் பாதசாரி கடக்கும்
இடங்கள் ஒவ்வொரு வீதி சந்திப்புகளில் உள்ளன.
சென்னை பாண்டி பசாரில் அவதானித்துபாருங்கள்
மௌண்ட் ரோடில் பாதசாரிகள் கடக்கும் இடங்கள் அரை கிலோமீட்டரில்
தான் இருக்கும். இன்னும் சில மாநகரங்களில் பாதசாரிகள்
பாதுகாப்பாக கடக்கும் இடமே கிடையாது
இம்மாதிரி சாலை ஒழுங்குத்தன்மை கடைபிடிக்காத
சமுதாயத்தில் இருந்து வெளிநாடு செல்வோர்
தங்களுக்குத் தெரிந்த ஒழுங்கை கடைபிடித்து
கண்ட கண்ட இடங்களில் சாலையை கடக்கமுயற்சித்து
பலியாகுகிறார்கள்.

நாம் எவ்வளவு மாறி 21 நூற்றில் வாழவேண்டியிருக்கிறது

இண்டி ராம்

கோலாகல உணர்வை எப்போது ஏன் இழந்தோம்?

கோலாகல உணர்வான கொண்டாட்டம் ஏன், எப்போது, வழக்கொழிந்தது?

இது எனக்கு புரியாத புதிர்

தமிழ் நாட்டில் ஆங்கிலப் புத்தாண்டு

தமிழ்ப் புத்தாண்டு

ஆகிய இருநாட்களிலும் மக்களின்

நடத்தையை அவதானியுங்கள்

ஆங்கிலப் புத்தாண்டு நாளில் சமூகத்தில் ஒரு கோலாகத் தோனியிருப்பதை

காணலாம். ஆனால் தமிழ்ப் புத்தாண்டில் கோயிலுக்கு

போவதையும் வட பாயாசம் மேலும் திரைப்படங்கள்

பார்ப்பதும் தான் நடக்கிறது

ஒரு கோலாகல உணர்வு எங்கும் பார்க்கமுடியாது

அதே போல சித்திரா பௌர்ணமி ஒரு காலத்தில்

காதலர் தினமாக இருந்தது

ஆனால் இக்காலத்தில் வேலண்டைன்ஸ் டே தான் அமர்க்களமாகக்

கொண்டாடப்படுகிறது

இது மாதிரி தமிழ் கலாச்சாரத்தில் கொண்டாட்ட உணர்வில்லாமல்

இருப்பதன் காரணமென்ன (holidays are commemorated than celebrated)

வட மாநிலங்களில் ஹோலி , பைசாக்கி, நவராத்திரி சமயங்கள்

ஆகிய நாட்களில் பலர் ஆடிப் பாடி தங்கள் மகிழ்ச்சியுணர்வை

வெளிக்காட்டுகிறார். தமிழர்கள் எப்போது ஒரு inhibited சமுதாயாமானார்கள்

அமெரிக்காவில் சுதந்திர தினத்தன்று எல்லா ஊர்களிலும்

எல்லா மக்களும் ஏற்றத்தாழ்வு பார்க்காமல், காண்பிக்காமல்

ஒன்று சேர்ந்து இயல்பாக கொண்டாடுகிறார்கள்

அரசுத் தலைவர்களோ அரசு நடத்தும் நிகழ்ச்சியோ

கிடையாது

நமக்குள் இருக்கும் கோலாகல உணர்வு வெளிநாட்டில் இருந்து

வந்துள்ள நாட்களில் தான் வெளிக்காட்டப்படுவது மனதில் ஒரு

புரியாத புதிரைத்தான் உருவாக்குகிறது

இண்டி ராம்

Monday, December 24, 2007

யூனிகோட் தமிழுக்கு தாவினால் என்ன பயன்?

ஆம் உறுப்பினர்கள் பங்கேற்பு பொங்க, மடலாடல் குழுக்களில் கடிதப்பரிமாற்றம் அதிகரிக்கவாய்ப்புள்ளது

எப்படின்னு கேட்கிறீங்களா

(1) தமிழ் மண வலைப்பூக்கள் திரட்டியில் ஆயிரக்கணக்கான விஷயங்கள்எழுதப்படுகின்றன (வலைபூக்கள் மூலம்)

அவைகளை வெட்டி ஒட்டி சிரமமில்லாமல் அனுப்பலாம்

அவைகளை அலசல் செய்யலாம்.

(2) சிலர் வலைப்பூவில் எழுதும் விஷயங்களை கொசுறுக்காக இங்கேயும் ஒட்டி அனுப்பலாம்

(வலைப்பூ எழுத்தாளர்கள் எல்லாம்யூனிகோட் தமிழ் தான் பயன்படுத்துகின்றனர்)

(3) சில சிரமங்கள் இருந்தாலும் யூனிகோட் தமிழில் எழுதுவதுசுலபம்.

ஏனெனில் லதா தமிழ் எழுத்துரு நிறுவவேண்டிய அவசியமில்லைஅது எக்ஸ்பி ஆபரேட்டிங்க் சிஸ்டத்தில் உள்ளது.ஆகவே ஆபீஸ் கணினியில் கூட யூனிகோட் தமிழில் எழுதமுடியும்

எனக்கு நம்பிக்கையுள்ளது

இண்டி ராம்

Friday, September 07, 2007

ஓய்வு காலத்தை எப்படி எதிர்நோக்குவது?

முதுமைகால வாழ்க்கைத் திட்டம்.

அதைப் பற்றி நான் சில கருத்துக்களை சொல்லப்போகிறேன்

சிலருக்கு அவைகள் பிடித்தமாக இருக்காது. ஏனெனில் அவைகள் தமிழக மரபுக்கு

கலாச்சாரத்திற்கு சற்று மாறானவை

எனது அப்பா 60 களில் சொல்லி வந்தார். செய்தும் காட்டினார்.

அதாவது நாம் வயதானவுடன் கல்யாணமான குழந்தைகளின் வீட்டில் 3 நாட்களுக்கு மேல்

இருக்கக்கூடாது. ஏனெனில் அது அவர்களுடைய பிரத்யேக வாழ்க்கையை கெடுத்துவிடும்

நாம் நமது குழதைகளில் வாழ்க்கையில் புகமாட்டோம் என்று எவ்வளவு

தான் கங்கனம் கட்டினாலும்

அவ்வாறு செய்வதை தவிர்க்கமுடியாது (நமது உள்ளுணர்வு தாமரை

மேலுள்ள நீர் மாதிரி இருக்கவுடாது.

திருமணமானவர்கள் எல்லோரும் எப்போவது சண்டை போடுவார்கள் தான். அது சிலசமயம்

காரசாரமாகவும் பயமுறுத்துவதாகவும் இருக்கலாம்.

ஆனால் சில நாட்கள் கழித்து அவர்கள் சமாதானம் அடைவர். அது இயல்புதான்

ஆனால் ஒருவரது பெற்றோர்கள் இருந்தால் அவர்களை வக்காலத்துக்கு இழுத்துவிடுவார்கள்

பெற்ற உணர்வால் பெற்றோர்களால் ஈடுபடாமால் இருப்பதை தவிர்க்கமுடியாது.

பெற்றோர்கள் குழந்தைகளின் நலனுக்காகத்தான் ஈடுபடவிரும்புவார்கள்.


2. தற்காலத்தில் எல்லோரும் 2 பெட்ரூம் அபார்ட்மெண்டில் வசிக்கிறார்கள்

ஆகவே பெற்றோர்கள் தங்க வசதி கிடையாது. 3 நாட்களுக்கு எல்லோரும் பொறுமையாக

அட்ஜஸ்ட் பண்ணிக்குவாங்க.

மற்றும் பால், தண்ணீர், பாத்ரூம் பிரச்சனைகள் பெரிதாகிவிடும்

3. கூட்டுக்குடும்பம் தற்கால வாழ்க்கைக்கு உதவாது

அது தனிக்குடித்தனம் நடத்தும் குழந்தைகளின் வாழ்க்கைக்கு நல்லதும் அல்ல.

4. மேலும் பெற்றோர்கள் தானே இருக்கிறார்கள் என்று நினைத்து

சிலர் (கணவனோ , மனைவியோ) தங்களது பொறுப்பை கைவிட சாத்தியம் இருக்கிறது

5. தாம்பத்திய குழந்தைகள் தமக்கு பிடித்தமான செயலை செய்யமுடியாது

பெற்றோர்களையும் சேர்க்கவேண்டுமே என்ற நினைப்பு எப்போதும் இருக்கும்

6. தாம்பத்தியர் அசமாத்தாக எங்குவேண்டுமானலும் (வீட்டில்) கட்டிப்பிட்ப்பதையோ,

முத்தமிடுவதையோ, உடலுறவு கொள்வதோ

சங்கடமாகப் போய்விடும். அதாவது அவர்களது பிரைவசி பறந்து போய் விடும்

7. எனது அப்பா 1960 லேயே மூன்று நாட்களுக்கு மேல் தனது

திருமணமான குழந்தைகளுடன் இருந்தது கிடையாது

8. எனது அண்ணன் அக்காக்கள் கூட இப்போது அவர்களது குழந்தைகளுடன் வேண்டுமென்றே

வாழ்வதில்லை.

9. கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்துவந்தவர்களுக்கு இது ஆச்சரியம் அளிக்கலாம்

10. மேலை நாடுகளில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் பள்ளிப்படிப்பு முடிந்ததும்

மேற்படிப்புக்கு அவர்களே கடன் எடுத்து படிக்கச் செய்கிறார்கள். தங்களது சம்பாத்தியத்தை

தங்களது ஓய்வுகால வாழ்க்கைக்கு சேமிக்கிறார்கள்

11. தாம் தீம் என்று கல்யாணச் செலவில் தமது சேமிப்பை செலவிடுவதில்லை

12. அதே மாதிரி லட்சக்கணக்காக பணம் செலவிட்டு பிரத்யேக மருத்துவ அல்லது பொறியியல்

கல்லூரிப் படிப்பிறகாகச் செலவிடுவதில்லை

13. ஓய்வடைபவர்கள் பல இண்டரஸ்ட்களில் ஈடுபடவேண்டும்

14 தமது குழந்தைகளில் வாழ்க்கையில் ஈடுபட்டு இருக்கவேண்டும் என்பதை நினைக்கக்கூடாது

15. உடல் நலம் குன்றாமல் இருந்தால் தாமே தனியாக வாழ மனதை திடப்படுத்திக்கொள்ளவேண்டும்

16. முதியோர் இல்லம் என்பது வெறுக்கத்தக்க இடம் அல்ல என்ற அபிமானத்தை உருவாக்கிக்கொள்ளவேண்டும்.

ஆம் கால மாற்றத்திற்கேற்ப நாம் கொஞ்சம் கொஞ்சமாக நமது

வாழ்க்கை விதங்களை மாற்றிக்கொள்ளவேண்டும்.

17. சில கணவன்மார்கள் தமது பெற்றோருக்கு மனைவி அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்ளவேண்டும்

என்று எதிர்பார்க்கிறார்கள் ஆனால் அதேமாதிரி தமது மனைவியின் பெற்றோர்களுக்கு

தமது அட்ஜஸ்ட்மெண்டை அளிப்பார்களா.

இதையெல்லாம் நாம் சிந்தித்து ஆராயவேண்டும், எழுதவேண்டும், மற்றவர்கள் மனதில்

இடம்பெறவைக்கவேண்டும். இவைகளெல்லாம் தர்மசங்கடமான விஷயங்கள்

பலர் இதைப் பற்றி சிந்திக்காமல் இருப்பதே நலம் என்று கூட நினைப்பார்கள்.

Change is the only thing that is constant.

இண்டி ராம்

Sunday, August 19, 2007

சினிமாவில் மது அருந்தும் காட்சி. அதன் தாக்கம்

எல்லா இந்திய சினிமாப் படங்களில் (குறிப்பாகத் தமிழ்ப் படங்களில்)
சில ஃபிரண்ட்ஸ் சேர்ந்து மது அருந்தும் காட்சி
அல்லது காதலில் தோல்வி அடைந்த ஹீரோ மது அருந்துவது
அல்லது வில்லன் ஒரு னைட்கிளப் பில் சதிதீட்டும்போது
மது அருந்துவது ஆகிய எல்லா காட்சிகளிலும்

மது அருந்துபவர் ஒரு லாயக் கில்லாதவர்
அளவுக்கதிகமாகக் குடிப்பவர்
கன்னாபின்னாவென்று பிதட்டுபவர்
குடித்து விட்டு வாந்தி எடுத்து செத்துப்போபவர்
குடிபோதையில் கொலை செய்பவர்
குடிபோதையில் பெண்டாட்டியையும் குடும்பத்தையும்
உதைத்து முரட்டுத்தனமாக நடந்துகொள்பவர்

என்று மது குடித்தலைப் பற்றி தவறான மனோபிம்பத்தை
படம் பார்ப்பவர்களின் மனதில் உருவாக்குகின்றனர்.
பார்ப்பவர்களும் அதை நம்புகின்றனர்.

நான் பல வருடங்களாக வெளிநாட்டில் வசித்துள்ளேன்

சில நண்பரகளை பார்டிக்கு கூப்பிடும்போது
அல்லது அவர்கள் வீட்டிற்கு செல்லும்போதோ
ஒன்றோ இரண்டோ பீர் அல்லது விஸ்கி
அருந்தி கொஞ்சம் ரிலாக்ஸாகி பேசிப் பழகி வந்துள்ளேன்

ஆனல் ஒரு பொழுதும் நானோ என் நண்பர்களோ
மதுவின் தாக்கத்தால்
தப்பாகப் பேசியதோ நடந்துகொண்டதோ இல்லை.
கல்யாண உபசரிப்பு விழாக்களில் மது வழங்குகிறார்கள்.

அவ்வப்போது தமிழ் நாடு செல்கையில் யாராவது
ஒரு பீர் கொடுத்தால் (கோடைகாலத்தில்)
நான் அதை எடுத்துக்கொண்டால் என் உறவினரெல்லாம்
எதோ நான் கெட்டுபோய்விட்டதாக கண்பிதுங்க பார்த்து
என்னை சங்கடமடைய வைக்கிறார்கள்

இதற்குக் காரணம் சினிமா, டிவி படங்களில்
மது அருந்துவதை தவறாகச் சித்தரிப்பதால் தான்
என்று நான் கருதுகிறேன்.

இந்த நிலமையை மாற்ற முடியாதா?

சிலபேர் அளவில்லாமல் மது அருந்தாலாம்
ஆனால் பெரும்பாலான வெளிநாடு வாழும்
தமிழர்கள் பொறுப்பாகத் தான் மது அருந்து
கின்றனர் என்பது என் அவதானிப்பு.

ஐரோப்பா, இங்கிலாந்து, அமீரக, மலேசிய சிங்கை, சிறீலங்கா
தமிழர்களின் அனுபவம் என்னவோ?

இண்டி ராம்

Thursday, August 16, 2007

வலைப்பூக்கள் மலர்கின்றன மடலாடல் குழுக்கள் வாடுகின்றன, ஏன்?

வலைப்பூக்கள் மலர்வதன்
மடலாடற்குழுக்கள் வாடுவதன்
காரணங்கள் என்னென்ன எனபதைப் பற்றிய

என் எண்ணங்கள்.

தமிழில் எழுதவிரும்பும் ஒரு எழுத்தாளனுக்கு
வலைப்பூக்கள் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

வலைப்பூ எழுத்தாளர்கள் ஒரு "சீரியசான" வாசகத்தை எழுதுகிறார்கள்
அவர்கள் ஒரு தலைப்பில் பல வாக்கியங்களைக் கொண்ட பதிவுகளை
கோர்வையாக எழுதி பதிவிடுகிறார்கள்.

வார்த்திற்கு ஒரு முறை ஏதாவது தலைப்பில் எழுதுகிறார்கள்.

பிளாக்கர் டாட் காமில் எழுதிய பிறகு தமிழ் மணம் மூலம் உலகத்தாருக்கு
தெரியப்படுத்துகிறார்கள்

ஆகவே அவர்கள் எழுதுவது பலகோடிக்கணக்காரின்
பார்வைக்கு சென்றடைகிறது

(மடலாடற்குழுவில் உறுப்பினர்கள் தொகை குறைவுதான்)

(மடலாடற்குழுவில் பதில் அளிக்க முதலில் உறுப்பினராக வேண்டும்)

(வெவ்வேறு மடலாடல் குழுக்கள் வெவ்வேறு எழுத்துரு பயன்படுத்துகிறார்கள் ஊ.ம் திSகி
தமிழ் உலகம்)

வலைப்பதிவுகள் பெரும்பாலும் யூனிகோட் தமிழில் தான் உள்ளது.

வலைப்பதிவாளர்களுக்கென்று பதில் அளிப்பவர்கள்
வலைப்பதிவாளரின் கோ?டி வாசகர்களாகி பதிவாளர்-வாசகர் உறவு
அன்னியோன்யமாகிவிடுகிறது. அது பதிவாளர்களுக்கு இதமாகவுள்ளது.
சில வாசகர்கள் தங்களது வாசகத்தை சட்டைபண்ணி படிக்கிறார்கள்
பின்னூட்டலும் தருகிறார்கள் என்று உணர்ந்து மனநிறைவடைகிறார்கள்

(மடலாடற்குழுவில் ஒவ்வொருவரும் தமக்கி?டப்பட்டதை எழுதுகிறார்கள்
கருத்துத் தொடர்ச்சியில்லை)

வலைப்பதிவாளர் சுயமாகத் தான் விரும்பிய தலைப்பில் வேண்டும்பொழுது எழுதுகிறார்

வலைப்பதிவாளர் தான் விரும்பினால் படங்களையும், ஒலியையும் இணைத்துக் காட்ட
முடியும்

(மடலாடல் குழுக்களில் அட்டாச்மெண்ட் கிடையாது)

வலைப்பதிவாளர் சில வாசகர்களிடமிருந்து பதில் வராமல் தன் எழுத்தை

பாதுகாத்துக்கொள்ளமுடியும்.

வலைப்பதிவாளர்களின் மின்னஞ்சல் பெட்டியில் பல கடிதங்கள் விழுவதில்லை.


இவ்வாறு பலவிதங்களில் வலைப்பதிவு வேறு பட்டு இருப்பதால்

நாலெழுத்து எழுதத் தெரிந்தவர்கள் வலைப்பதிவு தயாரித்து

எழுதும் ஆசையை நிறைவேற்றிக்கொள்கிறார்கள்.


சில விSவாசமான வாசகர்களின் நெருங்கிய சுகமான உறவில்

மன நிறைவுபெறுகிறார்கள்.

இண்டி ராம்

Wednesday, August 16, 2006

வரதட்சணை ஏன் வலுவடைந்துவருகிறது?

"Anti-Dowry Seminar"

Anti-Dowry Association of Jamal Mohamed College, Trichy is conducting
"Anti-Dowry Seminar" during August third week.

People who are really interested to do something to abolish dowry and
bride-burning in India can join as a member and serve for our society and
country.

It is an enormous problem in our country of a huge population.
-----------------------------------------------------------------------
It is a growing problem

Some years ago it was practiced among some caste groups

ண்ow it has spread to all caste groups and non-Hindus as well

It has even spread to the villages!

Why

Greed?

Availability of plenty of consumer goods

Awareness of status symbols

High cost of higher education

Lack of availability of FINANCIALLY ELIGIBLE BRIDEGROOMS is the prime
culprit

Why do I say so?

Young people who are marriage eligible are in the age group of 21-35

The parents of marriageable aged women want their daughters

to be married to financially capable men

Unfortunately even if the bridegroom is employed only about 10% of them

can earn enough to provide a decent living to the bride

All the women want to get married to that 10% men and so the bidding goes on

for the scarecely available goods (like gasoline prices going up and up)

To make matters worse

Higher education has become expensive. May get it from private colleges

Parents who sent their boys for higher education

feel the obligation to pay back the loan they may have incurred to educate
their sons

The potential bride's parents become an easy creditor

We have a funny way for justifying and moralizing every corrupt behavior

in our society.

அமாம் சார் அந்த பியூனுக்கு 500 ரூபாதான் சம்பளம்

இந்த காலத்தில் எப்படி வாழ்க்கையை நடத்தமுடியும்

கொஞ்சம் கொடுங்க

ஆமாம் சார் இந்த கிளர்க்குக்கு 4 பொண்ணுங்க

எப்படி அவங்களுக்கு கல்யாணம் பண்ணமுடியும் இந்த சம்பளத்தில்

கொஞ்சம் கொடுங்க

ஆமாம் இந்த ஆபீசர் இங்கே இருந்து டிரான்Sபராக இருக்கனும்னா

மினிSடருக்கு பணம் கொடுத்தாகவுனும்

அதை கன்சிடர் பண்ணி அவருக்கும் சேர்ந்து பணம் கொடுங்க

பிறகு உங்க பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் (nativity certificate)

கெடச்சிடும்

நமது சமுதாயம் விசித்திரமானதுதான்

இம்மாதிரி உணர்தல் மற்ற நாடுகளில் இருந்து பார்த்தால்தான்

அப்பட்டமா வருது

இண்டி ராம்

With the availability of so many electronic gadgets

the "kama" (kama doesn't have to be sexual desire alone...any excessive
desire is kama)

level has gone up

The parents themselves teach their marriageable boys

People should learn to slowly accumulate wealth and control their

impulse to enjoy the pleasures

They should discuss these issues in பட்டி மன்றம்

இம்மாதிரி சமூக பிரச்சனைகளையெல்லாம் விவாதிக்காம

மண்ணாங்கட்டி தலைப்புகளான

"ராமனா, ராவணனா எவன் உயர்ந்தவன்"

கிராம வாழ்க்கையா நகர வாழ்க்கையா எது மேலானது"

இட்டிலியா தோசையா எது சுவையானது

மாதவியா கண்ணகியா எவள் உயர்ந்தவள்

இப்படி வெட்டி தலைப்புகளையே வைத்து

தமாஷா நேரத்தை வீணாக்கியே பிரபல்யமான நடுநிலையாளர்களும்

பேச்சாளர்களும் பணம் பண்ணி வருகின்றனர்

அதையும் நம் தற்கால கலாச்சார கூறு என்று ஆதரித்தும் வருகிறோம்

கல்யாணவைதெட்டிய வாலிபர்களின் பொருளாதாரத் தகுதி

வளர்ந்தால் தான் இப்பிரச்சனைக்கு தீர்வு காணமுடியும்

மேலும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமுறைகளை வளர்க்காமல்

சுயமாகத் தேர்ந்தெடுத்த வாழ்க்கைத் துணை நிகழ்வுகளை ஆதரிக்கவேண்டும்

(லவ் மேரேஜ் என்றால் அதற்கு தவறான உள்ளர்த்தம் மக்கள் மனதில் உள்ளது (connotation)

சுயமாகப் பெண்ணை தேர்ந்தெடுத்தால்

அவளது அப்பன் தலையிலும், பணப்பை கையிலும் கைவைக்கும்

பழக்கம் உருவாகாது என்று நான் நினைக்கிறேன்

இண்டி ராம்

60 ஆம் ஆண்டு விழா ஒரு கேள்வி

ஒரு காலத்தில் (1947ல்) சராசரி இந்திய குடிமகரின் வாழ்வாண்டு 39 ஆகத்தான் இருந்தது.

ஆகவே 60 ஆண்டுகள் வாழ்வது ஒரு வரப்பிரசாதமாக இருந்தது

அதஅணாக 60 ஆம் ஆண்டை அமர்க்களமாகக் கொண்டாடினார்கள்

அதே மாதிரி தெற்கிந்தியர்கள் 60 ஆண்டு சுழற்சியை அனுசரிப்பதால்அந்த 60 ஆண்டு முடிந்தபிறகு இன்னொரு சுழற்சி காண்பதிருப்பதால்அது முக்கிய நிகழ்ச்சியாகக் கருதுகிறார்கள்

மேற்கூறிய இரண்டைத் தவிர வேறேவாது காரணங்களால்அதை விமரிசையாகக் கொண்டாடுகிறோமா?இந்த 60 ஆம் ஆண்டை தெற்கிந்தியர்கள் (குறிப்பாக தமிழர்களும் தெலுங்கர்களும்மட்டும் ஏன் அமர்க்களமாக அனுசரிக்கிறார்கள்?

மற்ற இந்தியர்கள் அதை ஏன் அமர்க்களமாகக் கொண்டாடுவதில்லை?

அதை ஏன் திருமண நிகழ்ச்சியாகக் கொண்டாடுகிறார்கள்அதன் உள் அர்த்தம் என்ன?.

இண்டி ராம்

ஆசி அளிக்கும் வயது

சிறப்பான காலகட்டங்களில் (பிறந்த நாள், திருமண ஆண்டு நாள் (wedding anniversaries)சிலர் சொல்வதை நீங்கள் கேட்டிருக்கலாம்அதாவது "உங்களை ஆசிர்வதிக்க எனக்கு வயசில்லைஆகவே உங்களை வாழ்த்துகிறேன் அல்லது இறைவனை வேண்டுகிறேன்"அந்த ஆசிர்வதிக்கத் தகுதிபெறும் வயசென்ன?60 ஆஅப்படியானால் அந்த தகுதி பெறுவதற்கு அடிப்படை என்ன?எல்லா 60 ஆண்டுகளையும் வழ்ந்தனுபவித்ததாலா?அல்லது நல்ல உடல்நலத்துடன் 60 ஆண்டுகள் வாழ்ந்தவர்கள் இறைவனால்வரப்பிரசாதம் அளிக்கப்பட்டவர்கள். அவ்வயசை அடைந்தவர்கள் எல்லோரும்தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்ஆகவே அவர்கள் ஆசி பெறுவது இறைவனின் ஆசியைப் பெறுவதற்குஇணையானது என்ற அடிப்படை உணர்வினால்தானா?தங்களது கருத்தென்னவோ?இண்டி ராம்

Saturday, April 22, 2006

பேச்சுத் தமிழ் குறுந்தட்டு

2002ல் ஆங்கிலம் மூலம் பேச்சுத் தமிழ் கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்காக ஒரு குறுந்தட்டு தயாரித்து அதை இலவசமாக பல நாடுகளில் உள்ளவர்களுக்கு அனுப்பினேன். இப்போது அதை இணையம் வழியாக அளிப்பதற்கானத் தகவலை எனது புதிய வலை தளத்தில் தந்துள்ளேன்.

செல்லவேண்டிய முகவரி

http://indyram.googlepages.com/home

இண்டி ராம்

Wednesday, April 19, 2006

தமிழ் மொழி வளர என்னென்ன செய்யக்கூடாது

> தமிழ்வாழ உழைப்போர்க்குத்
> துணையாக இருப்பாய்!
> தமிழை யார் எதிர்த்தாலும்
> எழுவாய் நீ நெருப்பாய்! -- காசி ஆனந்தன்


எப்படி தமிழை வாழவைப்பது?


தற்கால வாழ்க்கைக்கு தேவையான

பயனுள்ள அறிவை தமிழில் உருவாக்கும் முயற்சியினால் தான்

தமிழ் வளரும.

வெறுமனே செம்மொழி என்று பட்டம் கொடுப்பதனால் அல்ல.

தற்காலத்தில் செம்மொழியென்று கூறப்படும் மொழிகள் எல்லாம்

வெறும் கெரவ மொழிகளாகிவிட்டன.

ஹிந்தி எழுத்துக்களை அழிப்பதாலும.

மத்திய அரசை குறைகூறுவதாலும்

ஆங்கில வாசகப் பலகை களுக்கு தார்ப்பூச்சு செய்வதாலும்

உண்ணாவிரதம் இருப்பதாலும்

தமிழ் காப்பாளன் கட்சி ஆரம்பிப்பதாலும்

வள்ளுவனுக்கு இன்னுமொரு 1330 அடி சிலை அமைப்பதாலும்

தமிழ் மொழி வளராது

மத்திய வகுப்பினர், செல்வாக்கு மிகுந்த மேலை வகுப்பினர் எல்லாம் தமிழை ஒரு பாடமாவது மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் கற்காமல் இருந்தால் தமிழ் வளரவே வளராது

மக்களின் அடிப்படை தேவை

வாழ்க்கை நடத்த பணம்

அந்த பணத்தை ஈட்டும் வேலைக்குத்தேவையான அறிவு, தொழில்நுட்பம், வெளிப்படுத்தும் திறமைஆகியவற்றை தமிழ் மூலம் பெற வழிவகுக்கவேண்டும்

தமிழ் ஒரு பொழுதுபோக்குக்கு உதவும் அறிவை கொண்ட மொழி என்ற நிலைமையை மாற்ற

படித்த தமிழர்கள் முயற்சிக்கவேண்டும்

இண்டி ராம்

Monday, April 17, 2006

வட்டார, ஜாதி, மதத் தமிழில் பேசுவதை தவிர்க்கவேண்டும்

தமிழ் மொழியானது பல வட்டார வழக்குகளின்படி பல ஊர்நகரம்
இனம்தொழில் இடவமைப்பின்படி பேசப்பட்டு
வருகின்றது.

தமிழர்கள் பலவகைகளில் கண்டிப்பாக காலத்திற்கேற்ப மாறவேண்டும்
என்பதை நான் சுட்டிக்காட்டி வருகிறேன்

அதில் இதுவும் ஒன்று

அதாவது உயர்நிலைப் பள்ளி வரை படித்தவர்கள்
தூயதமிழிலேயே பேசவேண்டும்
தூயதமிழ் என்றால் என்ன ?
சாதாரண , பாடப்புத்தகம் மூலம் அறிந்த "எழுத்தில் எழுதப்படும்" இலக்கணத் தமிழ் எழுத்துத் தமிழுக்கும் பேச்சுத் தமிழுக்கும் அவ்வளவு வித்தியாசம் இருக்கக்கூடாது

வட்டாரத் தமிழ்
ஜாதித் தமிழ்
மதத்தமிழ்

ஆகிய (தான் பேசுவதைக் கேட்பவர் தான் எந்த ஊரையோ, ஜாதியையோ, மதத்தை சேன்றவரோ என்று பறைசாற்றவேண்டும் என்கிற எண்ணத்தை அது வரும்போதெல்லாம் எடுத்துவிடவேண்டும்)

ஒரு காலத்தில் மக்கள் இடப்பெயர்ச்சி, மக்கள் கலப்பு இல்லாத காலத்தில்
வட்டார, மத, ஜாதித் தமிழ் மேலோங்கி இருந்தது.

வீட்டார்கள் அவ்வாறு பேசுவதையும் ஊக்குவித்தும் வந்தனர்.

இக்காலத்தில் கேபிள் டிவி எல்லா பட்டி தொட்டியிலும்
பரவியிருப்பதால். செய்தி அறிவிப்பாளரின் தகுதரப்பட்ட தமிழ் எங்கும் பரவ வாய்ப்பிருக்கிறது

ஆகவே தொலைக்காட்சி நிறுவனங்கள் அந்த உயரிய பொறுப்பை உணர்ந்து
நல்ல தமிழில் செய்தியை எழுதி
முக அழகிகளால் படிக்கவைக்கவேண்டும்

இதைத் தான் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் செய்து வருகின்றனர்

ஒரு காலத்தில் நான் சொல்வேன்

நான் மத்திய மாவட்ட(திருச்சி) தமிழ் நாட்டைச் சேர்ந்தவன் தான்
ஆனால் தமிழில் பேசாமல் ஆங்கிலத்தில் பேச விரும்புகிறேன்
ஏன்

1. ஒருவர் தமிழில் என்னிடம் பேசினால் அவர் பேசும் நாலே வார்த்தைகளில்
அவரின் ஜாதியையும், மதத்தையும், வட்டாரத்தையும், படிப்பளவையும்
என்னால் அறிந்துகொள்ளமுடியும். என்னையும் என் பேச்சு மூலம் அறிந்து கொள்ள அவர்கள் விரும்புவார்கள். தமிழர்கள் கூடுமானவரை ஜாதிப்ற்று, வட்டாரப் பற்று, மதப் பற்று ஆகியவற்றை வீட்டை தாண்டி வெளியே காட்ட முயற்சிக்கக்கூடாது என்பது என் விருப்பம்.

ஆகவே ஆங்கிலத்திலேயே உரையாடல் செய்தால் இவற்றையெல்லாம்
தவிர்க்கமுடியும்.

2. மேலும் மூன்றுவிதத் தமிழ் (ஆனால் பணிவன்பான தமிழ் பேசாமல்) பேசுவது எனக்குப் பிடிக்காது

வாடா, வாப்பா, வாம்மா, வாங்க, வாங்க சார், வாய்யா, வா அப்படின்னு பேசினால் தமிழ் கற்பவர்களுக்கு யார் யாரிடம் இம்மாதிரி வெவ்வேறு வினைச்சொல் பயனித்து பேசுவது என்பது குழப்பமான பிரச்சனையை உருவாக்குகிறது. வெளிநாட்டில் வசிக்கும் தமிழ்க் குழந்தைகளுக்கு இது பெரிய பிரச்சனையை கொடுக்கிறது. ஆகவே அவர்கள் தமிழில் பேசுவதை தவிர்க்கிறார்கள்.

எல்லோரையும் (சின்ன குழந்தைகளை, வேலைக்காரர்களைக் கூட வாங்க
என்று எப்போதும் அழைத்தால் எவ்வளவு நல்லா இருக்கும்?

3. மூன்றாவது காரணம் தற்கால வெளிப்பாட்டுக்குத் தேவையான
வார்த்தைகள் தமிழில் இல்லாததால் பலர் ஆங்கிலத்தை சரளமாக
தங்கள் தமிழில் பேச்சில் பயன்படுத்தி வருகிறார்கள்.

(சினிமாக்காரர்களின், விளையாட்டு வீரர்களின் , வணிகர்களின்
பேட்டியைக் கேளுங்கள். பெரும்பாலும் அவர்கள் பண்ணி (பன்னி) த் தமிழிலியே பேசி தமிழ் நாட்டு ரசிகர்களை மகிழ்விக்கிறார்கள்?)

அதாவது பண்ணி என்கிற வினைச்சொல்லை மாத்திரம் தமிழில்
சொல்லி மற்றெல்லா வார்த்தைகளையும் ஆங்கிலத்தில் சொல்லி
பேசும் விதம் தான் பண்ணித் தமிழ் (வேடிக்கைக்காக பன்னி) என்பது

முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் பேசினால் இதையெல்லாம் தவிர்க்கமுடியும்
இல்லையா?

இண்டி ராம்